Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, June 1, 2012

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மே-31ல் புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடத்த இடதுசாரிகட்சிகள் முடிவு

0 comments
புதுச்சேரி,மே-26
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மே-31ல் புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடத்த இடதுசாரிகட்சிகள் முடிவு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலகுழு அலுவலகத்தில் இடதுசாரிகட்சி; தலைவர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிபிஜ மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன்,தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன்,நிர்வாகக்குழு உறுப்பினர் கீதநாதன்,சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராஐhங்கம்,பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்து,புரச்சிகர சோஸலிஸ்ட் கட்சி தலைவர் லெனின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் இக்கூட்டத்திற்கு பிறகு இக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியது வருமாறு,
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பாராளுமன்ற கூட்டம் முடிந்த பிறகு வரலாறு கானதா வகையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.7.50பைசா உயர்த்தியுள்ளது.இந்த விலை ஏற்றம் 39வது முறையாக மககள் தலையில் பேரிடியாக அமைந்துள்ளது.அமேரிக்கா நாட்டின் பொருளாளதார பின்டைவில் இருந்து அந்நாட்டை காப்பாற்றவே இந்த விலைஏற்றத்தை மத்திய மன்மோகன்சிங் அரசு மக்கள் தலையில் சுமத்தியுள்ளது கண்டனத்துகுறியது.மேலும் இந்த விலை உயர்வை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி நியாயபடுத்தும் வகையில் கூறியிருப்பது கண்டனத்திற்குறியது.எனவே இந்த விலைஉயர்வை ரத்து செய்யக்கோரி மே 29,30 ஆகிய இருதினங்களில் புதுச்சேரி முழுவதும் 40மையங்களில் தெருமுனைக்கூட்டமும்,மே 31ல் மறியல் போராட்டமும் நடத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என இக்கட்சி தலைவர்கள் கேட்டுகொண்டனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com