Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, May 24, 2013

மத்திய மாநில அரசின் மக்கள் விரோதகொள்கைகளை கண்டித்து சிபிஎம் சார்பில் புதுச்சேரியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 460 பேர் கைது.

0 comments

புதுச்சேரி,மே-24
மத்திய மாநில அரசின் மக்கள் விரோதகொள்கைகளை கண்டித்து சிபிஎம் சார்பில் புதுச்சேரியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 460 பேர் கைது.

உங்கள் பணம் உங்கள் கைகளில் என்ற மோசடி திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.மாதம் ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 35கிலோ அரிசி கிலோ ரூ.2க்கு வழங்க வேண்டும்.பிரதமரையும் உட்படுத்தும் வகையில் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும்.ஆன்லையன் வர்த்தகத்தை தடைசெய்ய வேண்டும்.புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் 6மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.


இலாஸ்பேட்டை
இலாஸ்பேட்டை தபால்நிலையம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,உழவர்கரைநகர கமிட்டி செயலாளர் லெனின்துரை,பிரதேசக்குழு உறுப்பினர் நடராஜன் உள்ளிட்ட 4பெண்கள் உட்பட 60பேர் கைதானார்கள்.


புதுச்சேரி நகரம்
புதுச்சேரி காமராஐர் சிலை எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிங்காரவேலு,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,ராமச்சந்திரன்,சுமதி,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ்,பிரதேசக்குழு உறுப்பினர் மதிவானன் உட்பட 90பேர் கைதானார்கள்.முன்னதாக அண்ணாசிலை எதிரில் இருந்து ஊர்வலமாக வந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மதகடிப்பட்டு
மதகடிப்பட்டு கடைதெருவில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கலிவரதன்,மண்ணாடிப்பட்டு கமிட்டி செயலாளர் சரவணன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் உலகநாதன்,ஆவணியப்பன்,அன்புமணி,சங்கர் உட்பட 85பேர் கைது செய்யப்பட்டனர்.


பாகூர்
பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் பிரதேச செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன் உட்பட 30பெண்கள் உள்ளிட்ட 75பேர் கைதானர்கள்.


வில்லியனூர்
வில்லியனூர் தாசில்தார் அலுவலகம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ராமசாமி,கே.முருகன்,கமிட்டி செயலாளர் முருகையன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் மணிபாலன்,தெய்வானை உள்ளிட்ட40பேர் கைது செய்யப்பட்டனர்.இதேப்போல் காரைக்கால்


காரைக்கால்
காரைக்கால் புதுபஸ்நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கமிட்டி செயலாளர் வின்சென்ட் பிரதேசக்குழு உறுப்பினர் கலியபெருமாள் உள்ளிட்ட 54பெண்கள் உட்பட 110பேர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com