Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, June 28, 2013

சட்டமன்றம் உள்ள போது சட்டம் இயற்ற உரிமையில்லை

0 comments


புதுச்சேரி,ஜுன்-24
சட்டமன்றம் உள்ள போது சட்டம் இயற்ற உரிமையில்லை என்ற ஜனநாயக பற்றாக்குறையை மார்க்சிஸ்ட்  கட்சி ஏற்றுகொள்ளாது என்று சிபிஎம்  தமிழ்மாநில செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் பேசினார்.

இந்திய சமூக விஞ்ஞானக் கழகத்தின் சார்பில் புதுச்சேரி யூனியன் பிரதேசக்திற்கு மாநில அந்தஸ்து கோரி கருத்தரங்கம் வடமுகத்து செட்டியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது.இக்கருத்தரங்கத்திற்கு புதுச்சேரி தலைவர் கே.முருகன் தலைமை தாங்கினார்.அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவத்தலைவர் சி.எச்.பாலமோகனன் அணைவரையும் வரவேற்று பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,
புதுச்சேரி மாநில வருவாய் 60சதவீதத்திற்கும் மேல் உள்ள போது மாநில அந்தஸ்து என்பது தொடர்ந்து மறுக்கபடுகிறது.மாநில அந்தஸ்து பெருவதற்கான போராட்டத்தில் மற்ற மாநிலத்தவர்களையும் இணைத்து போராட வேண்டும் என்றார்.அத்தகைய போராட்டத்தை  மார்க்சிஸ்ட் கட்சி  முன்னெடுத்து செல்லும்.

புதுச்சேரி மாநிலத்தில் விவசாய உற்பத்தி  என்பது குறைந்துள்ளது.விவசாய நிலங்கள் வணிகமயமாக்கப்பட்டுள்ளது.மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசு மேற்கு வங்கத்தில் நிலபயண்பாடுகுறித்து சட்டம் இயற்றி பாதுகாத்தது.அதில் தொழில்வளர்ச்சிக்கு நிலபயண்பாடு வரும்போது முன்னூரிமை அளிப்பது என்ற திட்டம்   வகுக்கப்பட்டது.அத்தகைய நிலையில் சட்டமன்றம் உரிமையை பெற்றுள்ள புதுச்சேரியில் சட்டம் இயற்ற உரிமையில்லை என்றால் மார்க்சிஸ்ட் கட்சி அத்தகைய ஜனநாயக பற்றாக்குறையை மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்று கொள்ளாது.எவேதான் கட்சியின் தமிழ்மாநிலக்குழு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறது என்றார்.மாநில அந்தஸ்து கோரிக்கையை அணைத்து கட்சியின் கோரிக்கையாக கொண்டு செல்ல வேண்டும்.

புதிய பொருளாதார கொள்கை அமல்படுத்திய 1991 ஆம் ஆண்டில் இருந்து 2012 வரை மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிசலுகையாக மத்திய அரசு 21லட்சம் வழங்கியுள்ளது.ஆனால் மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரி அரசு பெற்ற 4671 கோடியை தள்ளுபடி செய்ய மத்திய காங்கிரஸ் அரசு தயங்குகிறது என்றால் யார் நலன்களுக்கு ஆட்சி செய்யபடுகிறது என்ற கேள்வி எழுகிறது.மத்திய அரசு மாநிலத்திற்கு நிதி ஒதுக்கும் போது அரசியலை வைத்து நிதி ஒதுக்கீடு செய்படுகிறது என்றார்.

என்.குணசேகரன்
சமூக ஆய்வாளரும் சிபிஎம் தமழ்மாநில செயற்குழு உறுப்பினருமான என்.குணசேகரன் பேசுகையில், மத்தியில் ஆட்சி செய்பர்களின் கையிலேயே அணைத்து அதிகாரங்களும் இருக்கவேண்டும் என்பது கூட்டாட்சிக்கு விரோதமான செயல்.விடுதலை அடைந்து மொழிவாழி மாநிலங்கள் அமைக்கபட்டதற்கு காரணமானவர்கள் கம்யூனிஸ்டுகள்.எனவே தான்  மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் மேற்குவங்க முன்னால் முதல்வர் ஜோதிபாசு தலைமையில் மாநில முதல்வர்கள் கூட்டம் என்பது அப்போது நடைபெற்றது.தற்போது ஒரிசா,தமிழகம்,பீகார் போன்ற மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலங்களுக்கு நிதி ஓதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறும் நிலையை பார்க்கிறோம்.எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெரும் போராட்டத்தில் மக்களை திரட்டி போராட வேண்டும் என்றார்.

பேராசிரியர் மு.இராமதாசு,

புதுச்சேரி  பல்கலைகழக இயக்குநரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான போராசிரியர் மு.இராமதாசு பேசுகையில்,
2005ஆண்டு புதுச்சேரிக்கு வந்த பாராளுமன்ற நிலைக்குழு புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கொடுக்கலாம் என்று பரிந்துறைத்தது.மேலும் இன்னும் 5அல்லது 10ஆண்டுகளில் மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று நிலைகுழு சிபாரிசு செய்தது.யூனியன் பிரதேச அந்தஸ்துபடி புதுச்சேரிக்கு கடந்த காலங்களில் 90சதவீத நிதி என்பது மாணியமாக வழங்கப்பட்டது.அப்போதே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.தற்போது 90சதவீத மாணியம் என்பது குறைக்கப்பட்டு 30சதவீதம் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.சட்டமன்றம் இருந்தும் சட்டம் இயற்றுவதற்கோ அல்லது நமக்கான திட்டங்களை நாமே நிறைவேற்றி கொள்ள அதிகாரம் இல்லாதாது கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாக உள்ளது என்றார்.எனவே மாநில அந்தஸ்து பெருவது காலத்தின் கட்டாயம் என்றார்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவி தலைவர் என்.கொளஞ்சியப்பன் நன்றி கூறினார். இக்கருத்தரங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.
Read more...

மின் கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

0 comments
புதுச்சேரி,ஜுன்-20
மின் கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுச்சேரியில் ரூ.300கோடிக்கு மேல் மின்சார கட்டண உயர்விற்கு பரிந்துறையித்துள்ள மாநில அரசை கண்டித்தும்.உயர்த்திய கட்டணத்தை திரும்பபெற வேண்டும்.கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ள நிறுவனங்களிடம் மின் கட்டண பாக்கி வசூல் செய்ய வேண்டும்.முதியோர்களை வங்கிக்கு அலைகழிக்கபடும் உங்கள் கையில் உங்கள் பணம் என்ற மோசடித்திட்டத்தை உடனே கைவிட கோரி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலம் அருகில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,நிலவழகன்,ராஜாங்கம்,கலிவரதன்,கே.முருகன்,ராமச்சந்திரன்,ராமசாமி இடைகமிட்டி செயலாளர்கள்

லெனின்துரை,பிரபுராஜ்,முருகையன்,தமிழ்ச்செல்வன்,சரவணன் உள்ளிட்ட பிரதேசகுழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக அண்ணாசிலையிலிருந்து  24பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
Read more...

எல்எல்சி நிறுவனத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் முன்னிற்கும் என்று ஜி.ராமக்கிருஷ்ணன் கூறினார்.

0 comments
புதுச்சேரி,ஜுன்-23
எல்எல்சி நிறுவனத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் முன்னிற்கும் என்று ஜி.ராமக்கிருஷ்ணன் கூறினார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.இராமக்கிருஷ்ணன் புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது,நெய்வேலி நிறுவனத்தின் 5சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பதை ஒரு போதும் ஏற்று கொள்ளமுடியாது.மத்திய அரசு கடந்த காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிசலுகையாக ரூ.5லட்சத்து 70ஆயிரம் கோடி வரிசலுகையாக வழங்கியுள்ளது.

ஆனால் இன்றைக்கு எல்எல்சி நிறுவனத்தின் 5சதவீத பங்குகளை விற்பதின் மூலம் ரூ.440 கோடி ஈட்டபடும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.பல ஆயிரம் கோடி லாபத்தில் இயங்கும் நிறுவனத்தின் பொதுத்துறை பங்குகளை தனியார் நிறுவனங்கள் வாங்கினால் அதன் ஷேர் மதிப்பு கூடும் போது பொதுத்துறை நிறுவனத்தையே வாங்கும் நிலை ஏற்படும்.பங்கு விற்பனையை நியாயப்படுத்தி கூறும் அமைச்சர் நாராயணசாமி கூற்றை மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்று கொள்ளமுடியாது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நிலையை மத்திய அரசு எடுத்தபோது பலதரப்பட்டவர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.தற்போது எல்எல்சி தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அத்தகைய போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் துணைநிற்கும்.

உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டம் பொதுவினியோக திட்டத்தை சீர்குலைக்கும் திட்டம்.அணைவருக்கும் உணவை உத்தரவாதபடுத்தும் சட்டம் கொண்டு வரும் வேலையில் நேரடி பணப்பட்டுவாட திட்டம் என்பது எழை எளிய மக்களை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே புதுச்சேரி அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.அதேப்போல் மின்சாரகட்டணத்தை புதுச்சேரி அரசு உயர்த்தியிருப்பதை புதுச்சேரி அரசு திரும்ப பெற வேண்டும்.


கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இராமக்கிருஷ்ணன் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி கழிநீர்  அடைப்பை  சரிசெய்வதற்கு இயந்திரங்களை கொண்டு தான் சரிசெய்ய வேண்டும் என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன்,புதுச்சேரி பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியயோர் உடன் இருந்தனர்.
Read more...
Monday, June 17, 2013

புதுச்சேரி,ஜுன்-16 மின்கட்டண உயர்வை திருப்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி முழுவதும் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,ஜுன்-16 மின்கட்டண உயர்வை திருப்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி முழுவதும் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மின்துறையின் சார்பில் ரூ.300கோடிக்குமேல் மின்கட்டண உயர்வை மக்கள் மீது சுமத்தியுள்ளது.எனவே 100சதவீத மின்கட்டண உயர்வை புதுச்சேரி அரசு திரும்பப்பெற வேண்டும்.மக்களின் வாழ்வுரிமையை பரிக்கும் திட்டமான உங்கள் கையில் உங்கள் பணம் என்ற மோசடித்திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜுன் 20ல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.இப்போராட்டத்தை விளக்கி இத்தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. புதுசசேரி முதலியார் பேட்டையில் துவங்கிய வேன் பிரச்சார தெருமுனைக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர்கள் முருகன்,ராஜாங்கம்,நிலவழகன்,கலிவரதன்,ராமச்சந்திரன்,சுமதி இடைகமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,பிரபுராஜ் பிரதேசக்குழு உறுப்பினர்கள் நடராஜன்,மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.நேருவீதி காந்திவீதி சந்திப்பு,முத்தியால்பேட்டை,கருவடிக்குப்பம்,இலாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இத்தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது.
Read more...
Tuesday, June 11, 2013

தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி

0 comments
புதுச்சேரி,ஜுன்-11
தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் இருந்த அமல்படுத்த வேண்டும்.தனியார் பள்ளி,கல்லூரிகளின் கட்டாய நன்கொடை,கல்வி கட்டணங்களை முறைபடுத்த சட்டம் இயற்ற வேண்டும்.சென்டாக் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை  நடப்பு கல்வியாண்டின் துவக்கித்திலேயே வழங்க வேண்டும்.ஏற்கனவே வழங்கபட வேண்டிய மாணவர்களுக்கும் பாக்கித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.தனியார் பொறியியற்,மருத்துவக்கல்லூரிகளில் அரசின் 50சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி கல்வித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.பிரதேச செயலாளர் வெ.பெருமாள் ,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,நிலவழகன்,ராமசாமி,சுமதி,இடைகமிட்டி செயலாளர்கள் முருகையன்,தமிழ்ச்செல்வன்,சரவணன்,லெனின்துரை,பிரபுராஜ் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் ,திரளான பொதுமக்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்
Read more...
Monday, June 3, 2013

அரசுதுறைகளில் ஊழல் முறைகேடுகளை கட்டுபடுத்த மாதந்திர குறைகேட்பு கூட்டத்தை நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.

0 comments
புதுச்சேரி,மே-30

அரசுதுறைகளில் ஊழல் முறைகேடுகளை கட்டுபடுத்த மாதந்திர குறைகேட்பு கூட்டத்தை நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு,
புதுச்சேரி மாநிலத்தில் வெளிப்படையான நிர்வாகம் விரைவானசேவை ஊழல் முறைகேடுகளை கட்டுப்படுத்துதல் ஆகிய நோக்கத்திற்காக மக்கள் தொடர்புடைய முக்கியத்துறையில் மக்களின் குறைகேட்பு  திறந்த வெளி விவாதக் கூட்டங்களை நடத்திட அரசாணை என்.1 தேதி 15.6.2011 வெளியிடப்பட்டது.மேற்படி அரசாணையில் பட்டியலிடப்பட்ட முக்கிய துறைகள் மற்றும் தேவை அல்லது பொதுமக்களிடம் இருந்து வரும் கோரிக்கை அடிப்படையில் பட்டியலிடப்படாத மக்கள் தொடர்புடைய துறைகளில் மாதந்திர குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.ஆனால் அரசாணைப்படி மாதந்திரக் கூட்டங்களில் ஒரு சிலத்துறைகளில் நடந்தது ஆனால் தொடர்ந்து நடைபெறவில்லை.சிலத்துறைகளில் செயலாளர்கள் கூட கலந்து கொள்ளாத நிலைமை இருந்தது.

இந்நிலையில் 5.12.2012ல் தலைமைச் செயலாளர் தலைமையில் அரசு துறை செயலாளர்களால் மற்றும் சிறப்பு செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் முந்தைய அரசாணையை மறுபரிசீலனை செய்யபட்டு புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் மாற்றங்கள் உள்ளடக்கிய 31.12.2012 என்ற ஆணை என்.3 நிர்வாக சீர்திருத்த பிரிவால் வெளியிடப்பட்டது.மேற்படி வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள  கடும் நிபந்தனைகளும்,மாதந்திர குறைகேட்பு கூட்டத்தை  6மாதத்திற்கு ஒரு முறை மாற்றியது என்பதும் மக்களின் பிரச்சனைகள் தீர்க்க உதவாது.மக்கள் சேவைகள் தாமதப்படவுமே வழிவகை செய்யும்.ஆகவே நிர்வாக சீர்திருத்ததுறையின் ஆணையை மறுபரிசீலனை செய்வதோடு குறைந்தபட்சம் 3மாத்திற்கு ஒரு முறை மக்கள் குறைகேட்பு கூட்டத்தை துறைவாரியாக நடத்திட வேண்டும்.மேலும் மக்கள் கூறைகேட்பு கூட்டத்தை நடத்தாத பட்சத்தில் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து மக்கள் இயக்கத்தை அரசுத்துறைகளில் முன்பு நடத்தவும் கட்சி தீர்மானித்துள்ளது.இவ்வாறு தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பெருமாள் கூறியுள்ளார்.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com