புதுச்சேரி,ஜுன்-20
மின் கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரியில் ரூ.300கோடிக்கு மேல் மின்சார கட்டண உயர்விற்கு பரிந்துறையித்துள்ள மாநில அரசை கண்டித்தும்.உயர்த்திய கட்டணத்தை திரும்பபெற வேண்டும்.கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ள நிறுவனங்களிடம் மின் கட்டண பாக்கி வசூல் செய்ய வேண்டும்.முதியோர்களை வங்கிக்கு அலைகழிக்கபடும் உங்கள் கையில் உங்கள் பணம் என்ற மோசடித்திட்டத்தை உடனே கைவிட கோரி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலம் அருகில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,நிலவழகன்,ராஜாங்கம்,கலிவரதன்,கே.முருகன்,ராமச்சந்திரன்,ராமசாமி இடைகமிட்டி செயலாளர்கள்
லெனின்துரை,பிரபுராஜ்,முருகையன்,தமிழ்ச்செல்வன்,சரவணன் உள்ளிட்ட பிரதேசகுழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக அண்ணாசிலையிலிருந்து 24பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மின் கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரியில் ரூ.300கோடிக்கு மேல் மின்சார கட்டண உயர்விற்கு பரிந்துறையித்துள்ள மாநில அரசை கண்டித்தும்.உயர்த்திய கட்டணத்தை திரும்பபெற வேண்டும்.கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ள நிறுவனங்களிடம் மின் கட்டண பாக்கி வசூல் செய்ய வேண்டும்.முதியோர்களை வங்கிக்கு அலைகழிக்கபடும் உங்கள் கையில் உங்கள் பணம் என்ற மோசடித்திட்டத்தை உடனே கைவிட கோரி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலம் அருகில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,நிலவழகன்,ராஜாங்கம்,கலிவரதன்,கே.முருகன்,ராமச்சந்திரன்,ராமசாமி இடைகமிட்டி செயலாளர்கள்

