Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, June 17, 2013

புதுச்சேரி,ஜுன்-16 மின்கட்டண உயர்வை திருப்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி முழுவதும் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,ஜுன்-16 மின்கட்டண உயர்வை திருப்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி முழுவதும் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மின்துறையின் சார்பில் ரூ.300கோடிக்குமேல் மின்கட்டண உயர்வை மக்கள் மீது சுமத்தியுள்ளது.எனவே 100சதவீத மின்கட்டண உயர்வை புதுச்சேரி அரசு திரும்பப்பெற வேண்டும்.மக்களின் வாழ்வுரிமையை பரிக்கும் திட்டமான உங்கள் கையில் உங்கள் பணம் என்ற மோசடித்திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜுன் 20ல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.இப்போராட்டத்தை விளக்கி இத்தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. புதுசசேரி முதலியார் பேட்டையில் துவங்கிய வேன் பிரச்சார தெருமுனைக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர்கள் முருகன்,ராஜாங்கம்,நிலவழகன்,கலிவரதன்,ராமச்சந்திரன்,சுமதி இடைகமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,பிரபுராஜ் பிரதேசக்குழு உறுப்பினர்கள் நடராஜன்,மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.நேருவீதி காந்திவீதி சந்திப்பு,முத்தியால்பேட்டை,கருவடிக்குப்பம்,இலாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இத்தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com