Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, November 16, 2010

மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானம் குறித்து பேசும் தகுதி திமுகவுக்கு இல்லை: தூத்துக்குடியில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

0 comments


தூத்துக்குடி, நவ. 16-

அதிமுக நிலை குறித்த மார்க் சிஸ்ட் கட்சியின் தீர்மானம் குறித்து கருத்துகூறும் தகுதி திமுகவுக்கு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் செவ்வா யன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறிய தாவது:-

காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிக்க தயார் என்று அதிமுக கூறியது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

இந்தத்தீர்மானம் ஆறுதல் அளிப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இந் தத் தீர்மானத்தில் மத்திய -மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை கூற வேண்டிய கருத்தை கூற வேண்டிய நேரத் தில் எடுத்துரைக்க தயங்க மாட் டோம். அதே நேரத்தில் காங்கி ரசின் அனைத்து மக்கள் விரோ தக் கொள்கைகளையும் ஆதரிக் கும் திமுகவுக்கு இதுகுறித்து பேசும் உரிமை இல்லை.

மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசில் அங் கம் வகிக்கும் திமுக, பெட் ரோல், டீசல் விலை உயர்வு, உர விலை உயர்வு, சிமிண்ட் விலை உயர்வு, பஞ்சு ஏற்றுமதியால் நூல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங் களுக்கு அனுமதி அளிக்கும் முயற்சி, அந்நிய பல்கலைக் கழகங்களை அனுமதிக்கும் முடிவு போன்ற அனைத்துக் கும் கண்மூடித்தனமாக ஆதரவு அளிக்கிறது. சில்லரை வர்த்தகத் தில் அந்நிய நிறுவனங்களை அனுமதித்தால் 8 கோடிப் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும். இத்தகைய கொள்கை களுக்கு கை தூக்கி ஆதரவு அளிக் கும் திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர் மானம் குறித்து கருத்து கூறும் உரிமை இல்லை. காங்கிரஸ் தலைமையிலான அரசின் மக் கள் விரோத கொள்கைகளில் திமுகவின் நிலை என்ன என் பதை அவர்கள் முதலில் தெளிவு படுத்த வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக் கிய ஆ.ராசா சென்னையிலி ருந்து தில்லிக்கு புறப்படும் வரை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றார். ஆனால் தில்லிக்கு சென்று ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். வேறு வழியில்லை என்ற நிலை யில்தான் அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்த ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் மத்திய புலனாய்வுத்துறையை கேள்வி கேட்கும் அதிகாரம் அந்தக்குழுவுக்கு கிடைக்கும். மேலும் தவறு எங்கு நடந்தது? யாருக்கு பலன் சென்றது என் பதையெல்லாம் வெளியில் கொண்டுவர முடியும்.

தமிழக மீனவர்களின் பிரச் சனைக்கு மத்திய-மாநில அரசு கள் தீர்வுகாண வேண்டும். இலங்கைக் கடற்படையின ரால் மீனவர்கள் தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கடற்கரை மேலாண்மை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கடற்கரை பகுதிகளை சுற்றுலாத்தலமாக் குவதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு ஏற்படுவதோடு மீன் இன வளர்ச்சியும் பாதிக்கும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் முயற்சியின் ஒரு பகுதியாகவே அமெரிக்க அதி பர் ஒபாமா இந்தியா வந்தார். சில்லரை வர்த்தகம், உயர்கல்வி, நிதி, காப்பீடு போன்ற துறை களை அமெரிக்க நிறுவனங் களுக்கு திறந்துவிட வேண்டும் என்பதே அவரது வருகையின் நோக்கம் என்று அவர் குறிப் பிட்டார்.

தாமிரபரணியை பாதுகாப்போம்

தாமிரபரணி ஆறு குடிநீருக்கும் விவசாயத்திற்கும் தொடர்ந்து பயன்படவேண்டுமானால் இந்த ஆற்றில் 5 ஆண்டு காலம் மணல் அள்ளக்கூடாது என்று உயர்நீதிமன் றம் பிறப்பித்த உத்தரவை மாநில அரசு கறாராக செயல்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் படிப்படியாக தாமிரபரணி நீருக்கு பதிலாக கடல்நீரை சுத்திகரித்து தொழிற்சாலை தேவைகளுக்கு பயன்படுத்த முன்வரவேண்டும்.

வரும் டிசம்பர் 12ம் தேதி நதிநீர் பயன்பாடு, பாதுகாப்பு, சுற் றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் நிலைத்த தொழில் வளர்ச்சி பற்றிய கருத்தரங்கம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறவுள்ளது. இதில் அறிவியல் அறிஞர் கள், தொழில் வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com