புதுச்சேரி நவ 16
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திடக் கோரி, புதுச்சேரி பிரதேச கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கட்டுமானப் பொருட்களை குறைந்த விலையில் கூட்டுறவுத் துறை மூலம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களை முறையாக வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு மாத பென்~ன் தொகையாக ரூபாய் 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு, தனியார் மூலமாக வரவேண்டிய செஸ் வரி வசூல் செய்து, வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைப்பெற்றது.
பழைய பேருந்து நிலையம் எதிரில் நடந்து ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ கட்டுமானப் தொழிலாளர் சங்க பிரதேச செயலாளர் கலியன் தலைமை தாங்கினார். சிபிம் பிரதேச செயலாளர் வி. பெருமாள், சிஐடியூ மாவட்ட தலைவர் ஜி. ராமசாமி, செயலாளர் கே. முருகன், நிர்வாகிகள் நிலவழகன், குணசேகரன், சிவக்குமார் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
கொட்டும் மழையில் நடந்த இப்போராட்டத்தில் திரளான கட்டிடத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
படம் குறிப்பு: புதுச்சேரியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. செவ்வாயன்று மறைமலை அடிகள் சாலையில் பழ வியபாரிகள் குடை பிடித்த வண்ணம் வியாபாரம் செய்கின்றனர்.