
லங்கல்போடா (மே.வங்கம்), நவ.22-
மாவோயிஸ்ட்களின் துணையோடு மாநிலத்தின் பல பகுதிகளில் வெறியாட் டம் ஆடி வரும் திரிணா முல் காங்கிரசின் வன்முறை வெறிக்கும், ரத்தக்களறிக் கும் முடிவு கட்டுவோம் என்று மேற்கு வங்க முதல்வர் புத்த தேவ் பட்டாச்சார்யா அறை கூவல் விடுத்துள்ளார்.
வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள லங் கல்போடா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட் டார். இந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் திரிணாமுல் காங்கிரசார் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டு களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 160 பேர் கொலை செய்யப் பட்டுள்ளனர். இதில் திரி ணாமுல் மற்றும் மாவோ யிஸ்ட் அமைப்பு ஆகிய இரண்டும் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றன.
முதல்வர் புத்ததேவ் பேச் சின் பகுதிகள் வருமாறு :
வடக்கு 24 பர்கானாவில் சசன், ஹரோவா, ராஜர் ஹாட், மினாகா மற்றும் பங்கோர் ஆகிய இடங் களில் கடந்த சில மாதங் களாகவே வன்முறை சம்பவ ங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் திரிணாமுல் காங்கிர சார் மற்றும் மாவோயிஸ்ட் கள் இணைந்து செயல் படுகின்றனர். சசன் பகுதி யில் உள்ள குண்டர்களின் பட்டியலைத் தயார் செய்யு மாறு மாவட்ட ஆட்சி யருக்கு ஏற்கெனவே உத்தர விட்டுவிட்டேன். சட்ட விரோதமாக குவித்து வைக் கப்பட்டுள்ள அனைத்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள் ளோம்.
ராஜர்ஹாட் திட்டம் தேசத்திற்கே பெருமை சேர்க்கும் திட்டமாகும். மாநிலத்தின் அந்தஸ்தை உயர்த்தியதோடு, மாநிலம் குறித்த கருத்தோட்டத் தையும் மாற்றியுள்ளது. இந் தப்பகுதியில் பத்து லட்சம் பேர் குடியிருப்பார்கள். கணினி நிறுவனங்கள், கல்வி மையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என்று அனைத்து வகையான ஏற்பாடுகள் இருக்கும். பெரிய தொழில் மையமாக ராஜர்ஹாட் உருவாகும் என்று குறிப்பிட்டார்.
கிழக்கு மிட்னாப்பூர் மற்றும் தெற்கு 24 பர்கானா ஆகிய இரண்டு மாவட்ட பஞ்சாயத்துகளிலும் திரி ணாமுல் காங்கிரசார்தான் பொறுப்பில் இருக்கிறார் கள். இரண்டு பஞ்சாயத்து களிலும் ஊழல் பெருக் கெடுத்து ஓடுகிறது. இதற்கு எதிராக கட்சியின் ஊழியர் கள் மக்களைத்திரட்டி போராட முன்வர வேண் டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
தோழர் சரவணனுக்கு.
நமது கட்சி குறித்த உங்களுடைய செய்திகளைப் படித்தேன். அறிவுத்தளத்தில் இயங்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
ப.கவிதாகுமார்
மதுரை