Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, November 29, 2010

இலவச லுங்கி – சேலை மற்றும் சைக்கிள் கொள்முதல் செய்திருப்பதில் ஊழல் - கண்டன ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி நவ 29
இலவச லுங்கி – சேலை மற்றும் சைக்கிள் கொள்முதல் செய்திருப்பதில் ஊழல் முறைகேடு குறித்து, புதுவை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்ய+னிஸ்ட் கட்சியின் சார்பில் நான்கு மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது
புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பண்டிகையை யொட்டி இலவச லுங்கி சேலை கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதையும், மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் தரமற்றதை கொள்முதல் செய்திருப்பதில் முறைகேடுகள் குறித்து சமூகநலத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது துணைநிலை ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கூட்டுறவுத்துறை மூலமே இலவச திட்டங்களுக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி ஆம்ப+ர் சாலை சம்பா கோவில் எதிரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகர கமிட்டி பொறுப்பு செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் லெனின் துறை முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், ராமச்சந்திரன், முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். பிரதேச குழு உறுப்பினர் பிரபுராஜ், கமிட்டி உறுப்பினர்கள் நடராஜன், ரமே~;, ராமசாமி, சேகர், மணவாளன், சரவணன் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
கரிக்கலாம்பாக்கம் நான்கு முனை சந்திப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கொம்ய+ன் செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் ராமசாமி, பிரதேச குழு உறுப்பினர் மணிபாலன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கமிட்டி உறுப்பினர்கள் ஐயப்பன், நமச்சிவாயம் மற்றும் ரத்தினவேல், பத்மநாபன், சண்முகம், இன்னரசு, விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருபுவனை கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்க சிபிஎம் கொம்ய+ன் செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் எல். கலிவரதன், பிரதேசக்குழு உறுப்பினர் சரவணன், கமிட்டி உறுப்பினர்கள் ஆவணியப்பன், ராமமூர்த்தி, பெரியசாமி, அன்புமணி, ஆனந்தன், வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் நடந்த போராட்டத்திற்கு கொம்ய+ன் செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் நிலவழகன், பிரதேசக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், கமிட்டி உறுப்பினர்கள் வடிவேல், கலியன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
புதுச்சேரியின் நான்கு மையங்களில் இப்போராட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com