
புதுச்சேரி நவ 26
புதுச்சேரி திருக்காஞசி கிராமத்தில் சுடுகாடு கேட்டு சவப்பாடை ஊர்வலம் தீண்டாமை ஓழிப்பு முன்னணி சார்பில் டிசம்பர் 1ல் நடைபெறுகிறது.
தீண்டாமை ஓழிப்பு முன்னணியின் புதுவை அமைப்பாளர் ஜி.ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு.
வில்லியனூர் கொம்யூன் திருக்காஞ்சியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாமல் காலனி மற்றும் ஊர் மக்கள், சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆனபின்பும அவதியுறும் நிலை மாறவில்லை. சங்கராபரணி ஆற்றின் ஓரு கரையில் ஊர் குடியிருப்புகளும் அடுத்தகரையில் சுடுகாடும் இருந்தது. பல ஆண்டுகளாக மணல் கொள்ளைக்கூட்டம் சுரண்டிவிட்டதால் சுடுகாடு இருந்த இடம் நீர்ப்பிடிப்பு இடமாக மாறிவிட்டது. மேலும் ஆற்றின் குறுக்கே நீர்த்தடுப்பு அணை கட்டியுள்ளதால் வருடம் முழுவதும் ஆற்றின் நீர்ப்பிடிப்பு குறையாமல் உள்ளது. மழைக்காலம் வந்தால் வெள்ளம் கரைபுறண்டு ஓடும். இந்த நேரங்களில் இறந்தவர்களின் சடலங்களை டயர்(அ) வாழைமரத்தில் நீண்ட கயிற்றில் கட்டி, நீச்சல்தெரிந்த சிலர் மட்டும் இழுத்துச்சென்று அடக்கம் செய்கின்றனர். நலவசதிபடைதத சிலர் தங்கள் நிலத்தில் அடக்கம் செய்கின்றனர். வசதி படைத்ததவர்கள் நீர்படகுமூலம் கொண்டு சென்று அடக்கம் செய்கின்றனர். இதனால் ஓட்டுமொத்த
ஊர்மக்கள் பாதிக்கப்பட்டாலும் மிகவும் வறிய நிலையில் உள்ள தலித்மற்றும பிற்படுத்தப்பட்டோர் கடுமையான துன்பத்தை அனுபவிக்கின்றனர். எனவே மக்கள் வாழும் பகுதியிலேயே சுடுகாடு ஏற்பாடு செய்துதரக்கோறுகின்றோம்.
மேலும் பொது மக்கள் கழிப்பிட வசதியின்றி க~;டப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகாலை விடிவதற்குள் (அ) மாலை இருட்டியபிறகுதான் காலைக்கடன்களைக் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அதோடு அங்கு வசிக்கும் தலித் குடும்பங்களுக்கு குடிமனை கொடுக்கப்பட்டும் பட்டா கிடைக்கவில்லை. மேலும் தேவைக்கேற்ப புதிய குடிமனை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். மேற்கண்ட பிரச்சனைகள் குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனுகொடுத்து பேசியும் எந்தப்பயனும் இல்லை.
எனவே மேற்கண்ட கோரிக்கைகளை தீர்த்திடக் கோரி தீண்டாமை ஓழிப்பு முன்னணி சார்பாக சவப்பாடை ஊர்வலம் திருக்காஞ்சியில் துவங்கி வில்லியனுர் வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற உள்ளது. இப்போராட்டத்திற்கு சிபிஎம் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐp.லதா தலைமை ஏற்க உள்ளார். இவ்வாறு ராமசாமி கூறினார். முன்னணி நிர்வாகிகள் கலிவரதன், தலித்சுப்பையா, தவமனி, மணிபாலன், ஜானகி ஆகியோர் உடனிருந்தனர்.