Pages

ShareThis

Powered by Blogger.
 
Saturday, November 27, 2010

இலவச வேட்டி சேலை திட்டத்தில் புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும் முறைகேடுகளும்

0 comments


புதுச்சேரி நவ 23
இலவச வேட்டி சேலை திட்டத்தில் முறைகேடு செய்த புதுச்சேரி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் வெ. பெருமாள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும் முறைகேடுகளும்; தாண்டவமாடுகிறது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் விதிமுறைகளை மீறி வருகிறது. இதனால் ஒரு திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை வேறொன்றுக்கு திருப்பி விடுவது பல்லாங்குழி ஆட்டம் போல் உள்ளது.
மாநில துணை நிலை ஆளநர் ஜூலை 29, 2010ல் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் சமூக நலத்துறையில் திட்டமதிப்பீட்டுத் தொகைக்கு மேல் ரூ. 1.74 கோடி கூடுதலாக பணம் எடுக்கப்பட்டுள்ளது. நிதித்துறைக்கு தெரியாமல் 2009-2010 நிதியாண்டின் முடிவில் கடைசி தேதியில் பணம் பெறப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத விதி மீறல்கள் என எச்சரித்துள்ளார்.
இலவச வேட்டி சேலைத்திட்டத்திற்கு தேவையான துணிகள் கூட்டுறவு நெசவாலை கழகங்களிடம் இருந்து கடந்த காலங்களில் பெறப்பட்டது. தற்போது சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, கூட்டுறவு நிறுவனத்தில் இருந்து துணிகளை கொள்முதல் செய்வதை ரத்து செய்து வெளிச் சந்தையில் வாங்கிட முடிவெடுத்து, நடப்பு ஆண்டிற்கு ரூ. 3.50 லட்சம் குடும்பங்களுக்கும், மாற்றுத்; திறனாளிகளுக்கும் ரூ. 480 வீதம் இலவச வேட்டி சேலை வாங்க தீர்மானிக்கப்பட்டு ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு ரூ.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 10 நிறுவனங்களிடம் இருந்து ஏல ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு இருந்தது. இதில் இரண்டு நிறுவனங்களுக்கு உரிய சீல் இடப்பட்ட ஏல அறிவிப்பு ஒப்பந்தங்கள் ஏற்கப்பட்டுள்ளது. மற்றநிறுவனங்களின் சீலிடப்பட்ட ஓப்பந்த அறிவிப்புகளை பிரித்துக் கூடபார்க்க வில்லை. தலைமைச் செயலாளருக்கு வந்தபுகாரின் அடிப்படையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரமற்ற துணி என கண்டறியப்பட்டுள்ளது.
அதேப் போல் இலவச சைக்கிள்திட்;டத்திற்க்கு தனியார் ஏஜன்சியிடம் கொள்முதல் செய்த சைக்கிளின் தரம் குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேற்படி இரண்டு திட்டங்களிலும் மிகப்பெறும் ஊழல் நடந்திருப்பதால் சம்பந்தப்பட்ட அமைச்சர் கந்தசாமி மற்றும அதிகாரிகள் ஆகியோர மீது துணை நிலைஆளுநர் சிபிஐ விசாராணைக்கு உத்தரவிட வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை அமல் படுத்துவதில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள புதுச்சேரி காங்கிரஸ் அரசை கண்டித்து நவம்பர் 29 துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பும் மற்றும் பாகூர்,மதகடிப்பட்டு, வில்லியனுர், காரைக்கால் ஆகிய மையங்களில் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு பெருமாள் கூறினார்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com