
புதுச்சேரி நவ 18
திருபுவனை ~ரோன் சொல்யூ~ன்ஸ் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியூ சார்பில் புதுச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
~ரோன் சொல்யூ~ன்ஸ் நிறுவனத்தில் சட்டவிரோதமாக வேலைநீக்கம் செய்யப்பட்ட 15 தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலையளித்திட வேணடும். தொழிலாளர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். என்பன கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார். சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பொருமாள், சிஐடியூ நிர்வாகிகள் ராஜாங்கம், நிலவழகன், சிவக்குமார், உடல் உழைப்போர் சங்க செயலர் ராமசாமி ஆகியயோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள். பிரேம்குமார், தீர்த்தமலை, பன்னீர்செல்வம், வீரமணி, சசிக்குமார் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.