6வது நாளாக புதுவை மாணவர்கள் போராட்டம்..!
முல்லை பெரியார் அணை விவகாரம்
சோசலிசத்தால் மட்டுமே மாற்ற முடியும்
அமெ. தொழிலாளி வர்க்கத்தால் நொறுங்கி
6வது நாளாக புதுவை பல்கலைகழகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்..!
புதுச்சேரி பல்கலைகழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளது.
முல்லை பெரியார் அணை விவகாரம்
முல்லைப் பெரியாறு பிரச்சினையில், இரு மாநிலங்களுக்கிடையே பகைமை இல்லாமல், சுமூகமானத் தீர்வை காணவேண்டும்
சோசலிசத்தால் மட்டுமே மாற்ற முடியும்
வரும் எட்டாண்டுகளில் 28 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் அறிவித்துள்ளார்
அமெ. தொழிலாளி வர்க்கத்தால் நொறுங்கி
உலக முதலாளித்துவத்தின் சூதாட்டமைய மாக திகழும் அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பகு தியை கைப்பற்றுவோம்
Saturday, October 29, 2011
உழவர்கரை மாநாடு


புதுச்சேரி அக்-16
மின்சார கட்டண உயர்வை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் உழவர்கரை மாநாடு வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது உழவர்கரை நகரகமிட்டி மாநாடு பி.ராமமூர்த்தி நினைவரங்கத்தில் நடைபெற்றது.கோடிஏற்றத்ததுடன் துவங்கிய மாநாட்டில் கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் பங்கேற்று துவக்கவுரையாற்றினார்.கமிட்டி செயலாளர் எஸ்.லெனின்துரை வேலைஅறிக்கையை சமர்பித்தார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன் ராஜாங்கம் ,கே.முருகன்,ராமசாமி மற்றும் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.வாழ்த்தி பேசினார்கள்.இருதியாக மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் பிரதேசசெயலாளர் வெ.பெருமாள் பேசினார்.
இம்மாநாட்டில் புதிய உழவர்கரை நகரகமிட்டி செயலாளராக மீண்டும் எஸ்.லெனின்துரையும்,கமிட்டி உறுப்பினர்களாக நடராஜன்,ராமச்சந்திரன்,சத்தியா, ,சந்துரு,சேகர்,குப்புசாமி,குணசேகரன், பாஸ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுச்சேரி மின்துறை கடந்த ஏப்ரல் 2010ம் ஆண்டிலிருந்து ,மின்நுகர்வோர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு இதுநாள் வரைக்கான மின்சாரம், யூனிட் ஒன்றுக்கு 34.25காசு என கணக்கிட்டு தவனைமுறையில் கூடுதலாக வசூல் செய்வதை புதுச்சேர அரசு உடனடியாக கைவிட வேண்டும்.லாஸ்பேட்டை அரசு மருத்துவமனையை 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாமிப்பிள்ளை தோட்டத்தில் உள்ள வெள்ளவாரியை துhர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
Friday, October 28, 2011
மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி புதுச்சேரி மின்துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதுச்சேரி அக்-24
மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி புதுச்சேரி மின்துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் கடந்த 7 மாதத்தில் பயண்படுத்திய மின்சாரத்திற்கு கூடுதலாக ஒரு யூனிட் ஒன்றுக்கு 34.25காசு உயர்த்தி மின்நுகவோர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மின்துறை உத்தரவை உடணடியாக திரும்ப வேண்டும்.மின்துறையில் ஏற்படும் இழப்பை கோடிகணக்கில் மின்பாக்கிவைத்துள்ள பெரிய நிறுவணங்களிடம் இருந்து வசூலித்து ஈடு செய்ய வேண்டும். மின்சார பற்றாக்குறையை போக்க மத்திய மின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெறவேண்டும்.மின்துறையில் மின்இழப்பை சரிசெய்ய புதிய டிரான்பார்ம்களை அமைத்து தங்குதடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி நகரம்
புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள துணைமின்துறை அலுவலம் எதிரில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ் தலமை தாங்கினார்.தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் கண்டன உரையாற்றினார்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,நிலவழகன் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் மது,மதிவாணன்,மணவாளன்,சரவணன்,உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
பாகூர்பாகூர் மேற்கு வீதியில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு கொம்யூன்செயலாளர் எஸ்.பத்மநாபன் தலமை தாங்கினார்.சிபிஎம் பிரதேசக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன்,விவசாய சங்க தலைவர் ஜி.ராமசாமி ,கட்டுமான சங்க பொதுச்செயலாளர் கலியன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் முத்துலிங்கம்,சாம்பசிவம்,சரவணன்,செல்வராஜ்,வடிவேலு உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
உழவர்கரை
சாமிப்பிள்ளை தோட்டத்தில் நடந்த போராட்டத்தில் கட்சியின் உழவர்கரை நகரகமிட்டி செயலாளர் லெனின்துரை,கமிட்டி உறுப்பினர்கள் நடராஜன்,சத்தியா,சந்துரு,பா°கர்,உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக மின்துறையை கண்டித்து அகல்விலக்குகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மாஹே அரசு மருத்துவனையை நவீன படுத்த வேண்டும்

புதுச்சேரி அக்-22
மாஹே அரசு மருத்துவனையை நவீன படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பள்ளுர் இடைகமிட்டி மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளுர் இடைகமிட்டி மாநாடு பள்ளுhரில் நடைபெற்றது.இம்மாநாட்டை கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் துவக்கி வைத்து பேசினார்.கமிட்டி செயலாளர் ஜனார்த்தனன் வேலை அறிக்கையை தாக்கல் செய்தார்.மாநாட்டை கேராள மாநிலக்குழு உறுப்பினர் கே.கே.ராகேஷ் முடித்து வைத்து பேசினார்.
மாநாட்டில் புதிய இடைகமிட்டி செயலாளராக ஜனார்த்தனன் தேர்வு செய்யப்பட்டார்.மேலும் பள்ளுர் இடைகமிட்டி உறுப்பினர்களாக சுரேந்திரன்,நாராயணன்,கங்காதரன்,பாபு,அஜிந்தன்,தாமோதரன்,பிரவீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாஹே அரசு கல்லுhரியில் புதிய படப்பிரிவுகளை துவக்க வேண்டும்.கேரளாவில் உள்ளதைப்போல் நலவாரியங்களை துவக்க வேண்டும்.கேரளாவில் வழங்கபடுகின்றதைபோல் புதுச்சேரி ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பண்டங்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மாணங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
Saturday, October 15, 2011
மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள புதுச்சேரி அமைச்சரை பதவியிலிருந்து நீக்ககோரி

புதுச்சேரி அக்-14
மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள புதுச்சேரி அமைச்சரை பதவியிலிருந்து நீக்ககோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டட்ம நடைபெற்றது.
10ஆம் வகுப்பு தேர்வில் மோசடியில் ஈடுபட்ட புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை கண்டித்தும்.மாணவர் மற்றும் ஆசிரியர் சமூகத்திற்கும் ,மாநிலத்தின் மக்களுக்கும் பெரும் இழிவை ஏற்படுத்திய கல்வித்துறை அமைச்சரை உடனடியாக முதல்வர் ரங்கசாமி அப்பதவிலிருந்து நிக்க வேண்டும்.கடந்த ஆட்சியில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகள் மீது சிபிஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
காந்திவீதி நேருவீதி சந்திப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன்,ராமச்சந்திரன்,இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,முருகையன்,லெனின்துரை,மற்றும் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
அமைப்புசார தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கதொகை ரூ.2ஆயிரம் வழங்க கோரி
அமைப்புசார தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கதொகை ரூ.2ஆயிரம் வழங்க கோரி புதுச்சேரி சட்டமன்றம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்டோ,கட்டுமாணம்,சுமைப்பணி,வீட்டுவேலைசெய்யும் பெண்தொழிலாளர்கள் உள்ளிட்ட அiப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கதொகை ரூ.2ஆயிரம் வழங்கவேண்டும்.நலச்சங்த்தை நலவாரியமாக மாற்றி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.வீட்டுவேலை செய்யும் பெண்களை அமைப்பு சார நலச்சங்கத்தில் உறுப்பினராக்க வேண்டும்.படிவம் வழங்கிய அணைவரையும் கட்டுமான நலவாரியம்,அமைப்பு சாரா நலச்சங்கத்தில் உறுப்பினராக்க சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டமன்றம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஜடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் கே.முருகன்,நிர்வாகிகள் ராஜாங்கம்,நிலவழகன்,சிவக்குமார்,கலியன்,சுமதி,ராமசாமி,மது,மதிவாணன்,உள்ளிட் திரளான முறைசார தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக பழைய பேரூந்து நிலையம் எதிரிலிந்து ஊர்வளமாக சென்று சட்டமன்றம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைச்சரிடம் மனு
பின்னர் தொழிலாளர்துறை அமைச்சர் ராஜவேலு வை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.மனுவை பெற்றுகொண்ட அமைச்சர் அதிகாரிகளை அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக சங்க நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார்.
புதுச்சேரி நகரகமிட்டி மாநாடு
புதுச்சேரி அக்-12
போக்குவரத்து வரத்து நெரிசலை முறைபடுத்த வேண்டும் என கட்சியின் புதுச்சேரி நகரகமிட்டி மாநாடு வலியுறுத்தியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது புதுச்சேரி நகரகமிட்டி மாநாடு பி.ராமமூர்த்தி நினைவரங்கத்தில் நடைபெற்றது.மாநாட்டை துவக்கிவைத்து கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் போசினார்.மாநாட்டு அறிக்கையை கமிட்டி உறுப்பினர் எம்.பி.மதிவாணன் வாசித்தார்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,கே.முருகன்,எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.மாநாட்டை நிறைவு செய்து சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பேசினார்.
இம்மாநாட்டில் புதிய நகரகமிட்டி செயலாளராக என்.பிரபுராஜ் தேர்வு செய்யப்பட்டார்.மேலும் நகரகமிட்டி உறுப்பினர்களாக சுமதி,மதிவாணன்,மணவாளன்,மது,துரைமுருகன்,சரவணன்,சிவக்குமார்,அழகர்ராஜ் உள்ளிட்ட 9பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை காலம் கடத்தாமல் உடனே நடத்த வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும்.அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்ற வேண்டும்.நகர பகுதியில் ஏழைமக்களுக்கு அடுக்கு மாடிகுடியிருப்புகளை கட்டி கொடுக்க வேண்டும்.என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
Read more...
போக்குவரத்து வரத்து நெரிசலை முறைபடுத்த வேண்டும் என கட்சியின் புதுச்சேரி நகரகமிட்டி மாநாடு வலியுறுத்தியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது புதுச்சேரி நகரகமிட்டி மாநாடு பி.ராமமூர்த்தி நினைவரங்கத்தில் நடைபெற்றது.மாநாட்டை துவக்கிவைத்து கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் போசினார்.மாநாட்டு அறிக்கையை கமிட்டி உறுப்பினர் எம்.பி.மதிவாணன் வாசித்தார்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,கே.முருகன்,எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.மாநாட்டை நிறைவு செய்து சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பேசினார்.

இம்மாநாட்டில் புதிய நகரகமிட்டி செயலாளராக என்.பிரபுராஜ் தேர்வு செய்யப்பட்டார்.மேலும் நகரகமிட்டி உறுப்பினர்களாக சுமதி,மதிவாணன்,மணவாளன்,மது,துரைமுருகன்,சரவணன்,சிவக்குமார்,அழகர்ராஜ் உள்ளிட்ட 9பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை காலம் கடத்தாமல் உடனே நடத்த வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும்.அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்ற வேண்டும்.நகர பகுதியில் ஏழைமக்களுக்கு அடுக்கு மாடிகுடியிருப்புகளை கட்டி கொடுக்க வேண்டும்.என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
Monday, October 3, 2011
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம்

புதுச்சேரி அக்-3
அரியாங்குப்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.அரியாங்குப்பம் மருத்துவமனையை மேம்படுத்தி 24 மணிநேரமும் மக்கள் பயன்பாட்டிற்கு செயல்படுத்த வேண்டும்.வீடு இல்லாத ஏழை மக்களுக்கு தொகுப்பு வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும் .மனைப்பட்டா இல்லா மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தியும், அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.அரியாங்குப்பம் ஆர்.கே.நகரில் நடந்த இப்பொதுக்கூட்டத்திற்கு கே.ஜெகதீசன் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,தமிழ் மாநிலகுழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.கமிட்டி உறுப்பினர்கள் பிரபுராஜ்,மதிவானன்,சிவசோலை,கலியமூர்த்தி உள்ளிட்ட திரளானேர் பங்கேற்றனர்.

புதுச்சேரி அக்-3
சர்வதேச நடவடிக்கை தினத்தை யொட்டி சிஜடியு,ஏஜடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும் .கூட்டு பேரம் கூட்டு ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும்.தொழிற்சங்க,ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.நாளொன்றுக்கு 7மணிநேரமும்,வாரத்திற்கு 5நாட்கள் மட்டுமே வேலை என்பதை உத்தரவாத படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி அக்டோபர் 3ல் சர்வதேச நடவடிக்கை தினத்தில் இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணாசாலையில் நடந்த இப்போராட்டத்திற்கு ஏஜடியுசி மாநில செயலாளர் வி.அபிஷேகம் தலைமை தாங்கினார்.சிஜடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,ஜஎன்டியுசி தலைவர் ஆர்.பலராமன்,ஏஜசிசிடியு துனைதலைவர் சங்கரன்,பிஎம்எஸ் தலைவர் பி.ராமச்சந்திரன்,யுடியுசி செயலாளர் வி.சந்திரசேகரன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் இப்போரட்டத்தில் பங்கேற்றனர்.
படம் உள்ளது
Saturday, October 1, 2011
நடைபாதை வியாபாரிகளுக்கான தேசிய கொள்கையை அமல்படுத்த வேண்டும்

புதுச்சேரி செப்-27
நடைபாதை வியாபாரிகளுக்கான தேசிய கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி அரசை சிஜடியு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுவை நகர நடைபாதை மற்றும் சன்டே மார்க்கெட் சிஜடியு வியாபாரிகள் சங்கத்தின் பேரவைக்கூட்டம் சங்க தலைவர் டி.எஸ் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இப்பேரவையில் சங்கத்தின் கவுரவத் தவைவர் தா.முருகன்,சிஜடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,இணைசெயலாளர் ஆர்.ராஜாங்கம் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.சங்கத்தின் செயலாளர் அழகர்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பாலாஜி,வடிவேல் உள்ளிட்ட திரளான நடைபாதை வியாபாரிகள் பங்கேற்றனர்.
மத்திய அரசு கடந்த 2004 ஆண்டு நடைபாதைவியாபாரிகளை பாதுகாக்க தேசிய கொள்கையை வகுத்துள்ளது.அதில் இவ்வியாபாரிகளுக்கு மின்சாரம்,குடிநீர் வசதி உள்ளிட்ட அடிபடை வசதிகளை நிறைவேற்றி பாதுகாப்பு அளிக்க வேண்டும்.தொழிற்சங்க பிரதிநிதிகள்,காவல்துறை,நகராட்சி,வங்கி அதிகாரிகள் கொண்ட அமைப்புக்குழு ஏற்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளது.இந்த கொள்கையின் சுற்றரிக்கையை புதுச்சேரி தலைமை செயலாளருக்கு அனுப்பட்டுள்ளது. எனவே தேசிய கொள்கையின் பரிந்துரைகளை புதுச்சேரி அரசு அமல்படுத்த வேண்டும்.காவல்துறை அதிகாரிகளின் கெடுபிடிகளை கைவிட வேண்டும் .முறைசார தொழிலாளர்களுக்கு தீபாவளி பன்டிகைக்கான ஊக்க தொகை ரூ.2ஆயிரம் வழங்க வேண்டும்.சிஜடியு சார்பில் அக்டோபர் 11ல் சட்டமன்றம் நோக்கி நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் இப்பேரவையில் நிரைவேற்றப்பட்டது.
Subscribe to:
Comments (Atom)
