Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, September 25, 2012

விளை நிலங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும்

0 comments
புதுச்சேரி,செப்-23
விளை நிலங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று புதுச்சேரி அரசை விவசாயிகள் சங்க  மாநாடு   வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 11வது மாநாடு, பாகூரில் உள்ள  தோழர்.என்.வி நினைவரங்கத்தில் (தர்மராஜா திருமண நிலையத்தில்)  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இம்மாநாட்டின் கொடியை சங்கத்தின் பிரதேசக்குழு உறுப்பினர் கோ.இராமசாமி ஏற்றிவைத்தார்.கொம்யூன் குழு செயலாளர் த.முத்துலிங்கம் பிரதிநிதிகளை வரவேற்றார். சங்கத்தின் பிரதேச தலைவர் வே.கு.நிலவழகன் மாநாட்டிற்கு  தலைமை தாங்கினார்.விவசாயிகள் சங்கத்தின் தமிழ்மாநில பொருளாளர் ஏ.நாகப்பன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,கொம்யூன் குழு செயலாளர் தமிழ்ச்செல்வன்,வி.தொ.ச வின் பிரதேச செயலாளர் மணிபாலன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள்.சங்கத்தின் பிரதேச செயலாளர் பத்மநாபன் வேலை அறிக்கை தாக்கல் செய்தார்.வரவு செலவு அறிக்கையை பொருளாளர் சரவணன் வாசித்தார்.அதனை தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தின் நாகைமாவட்ட செயலாளர் வி.சுப்புரமணியன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.


புதிய நிர்வாகிகள்

சங்கத்தின் புதிய பிரதேச தலைவராக மீண்டும்  வே.கு. நிலவழகன்,செயலாளராக வி. சங்கர்,பொருளாளராக எஸ்.எம்.தமீம் உள்ளிட்ட 15பேர் கொண்ட புதிய பிரதேசக்குழு தேர்வு செய்யப்பட்டது.


தீர்மாணங்கள்

காரைக்காலுக்குரிய  காவிரி நீரைப்பெற மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள காரைக்கால் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக  இந்த ஆண்டு  அறிவித்து ஏக்கருக்கு ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும்.அதேபோல் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு தலா 10ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3500 வழங்க வேண்டும்.எல்.ஆர்.கூட்டுறவு சர்கக்கரை ஆலை வழங்க வேண்டிய பாக்கி தொகை ரூ.45கோடியை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். பால்கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.25  வழங்க வேண்டும்.மாட்டு தீவனம் மாண்ய விலையிலும்,உரம் பூச்சி கொள்ளி மருந்துகளை உரிய காலத்தில் தட்டுபாடின்றி கிடைக்கவும்,மானியத்துடனும்  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.
Read more...
Friday, September 21, 2012

இடதுசாரிகட்சிகள் அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரியில் சாலைகள் வெறிச்சோடி காணப்பபட்டது

0 comments

புதுச்சேரி,செப்-20
இடதுசாரிகட்சிகள் அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரியில் சாலைகள் வெறிச்சோடி காணப்பபட்டது.

டீசல் லிட்டருக்கு ரூ.5 ஆக உயர்த்தியது.சிலிண்டர் ஆண்டுக்கு 6மட்டுமே வழங்குவது.சிறுவணிகத்தில் அன்னியமுதலீடு  அனுமதிப்பது உள்ளிட்ட மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் முடிவுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக்,புரட்சிகர சோஸலிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகட்சிகள் சார்பில் வியாழன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு விடுதலைசிறுத்தைகள்,தேசிய முற்போக்கு திராவிட கழகம்,புதுச்சேரி வர்த்தகர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்திருந்தது.

சாலைகள் வெறிச்சோடியது.

புதுச்சேரியில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் நகரத்தில் உள்ள  நேருவீதி,காந்திவீதி,அண்ணாசாலை,காமராஜர் சாலை,பெரிய மார்க்கட்,சின்னமணிகூண்டு,முத்தியாள்பேட்டை,நெல்லித்தோப்பு,முதலியார்பேட்டை,சாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்காடிகள்,கடைகள்,திரையரங்குகள் உள்ளிட்டவைகள் முற்றிலும் மூடப்பட்டிருந்தன.நகரத்தில் ஆட்டோக்கள்,டெம்போக்கள்,தனியார் பேருந்து முற்றிலும் இயங்காததால் புதிய பேருந்துநிலையம்,சாலைகள் வெறிசோடிகாணப்பட்டது.ஓரி  இரு அரசு பேருந்துகள்  போலீசார் பாதுகாப்போடு இயங்கினாலும் பொது மக்கள் வரத்து முற்றிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளுக்கு விடுமுறை

தனியார் பள்ளிகள்,கல்லுhரிகள் இயங்கவில்லை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிந்ததால் வியாழன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தையும் வேறு தேதிக்கு மாற்றப்பட்டது.அரசு பள்ளி பேருந்துகள் இயங்காததால் அரசு பள்ளி மாணவர்கள் வரத்து குறைவாக இருந்தது.
இடது சாரிகட்சி தலைவர்கள் மறியல்
காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,கே.முருகன்,ராமச்சந்திரன்,இராமசாமி,சுமதி,சிபிஐ தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன்,நிர்வாகிகள் முருகன்,ஆனந்து,சேது செல்வம்,ஏகாம்பரம்,ஆர்எஸ்பி மாநில தலைவர் லெனின்,விடுதலைசிறுத்தைகள் மாநில அமைப்பாளர் பாவாணன்,தேமுதிக மாநில நிர்வாகி தனசேகரன் உட்பட 6பெண்கள் உள்ளிட்ட 182 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.இதேப்போல் பாகூரில் சிபிஎம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 40பேரும்,மதகடிப்பட்டில் கொம்யூன் கமிட்டி செயலாளர் சரவணன் தலைமையில் 42பேரும் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதானர்கள்.பார்வர்டு கட்சி மாநில தலைவர் முத்து தலைமையில் ரெயிலை மறிக்க சென்ற 10பேரை போலீசார் கைது  செய்தனர்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதேப்போல் அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் கிளை தலைவர் அன்பரசி ஜூலியட்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  முகவர்கள் கல்விக்குழு தலைவர் ராம்ஜி கண்டன உரையாற்றினார்.
Read more...
Monday, September 17, 2012

உணவு பாதுகாப்பை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் நடைபயண இயக்கம்

0 comments
புதுச்சேரி,செப்-11
சுஸ்லான் ஆலையை திறக்க கோரி சிஐடியு சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி திருவாண்டார் கோவிலில் சட்டவிரோதமாக மூடப்பட்டுள்ள சுஸ்லான் காற்றாலை தயாரிக்கும்  தொழிற்சலையை உடனே திறக்க வேண்டும்.  வேலை மறுக்கப்பட்ட கடந்த 3 மாதங்களுக்கு தொழிலாளர்களுக்கு சம்பளம் அளிக்க வேண்டும். தொழிலாளர்களின் சம்பள பிரச்சனையை தொழிலாளர் துறை ஆணையர் முன்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். பணீ நீக்கத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
காந்தி நகரில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சுஸ்லான் தொழிலாளர் சங்க தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி,செயலாளர் கே.முருகன்,இணை செயலாளர் சிவக்குமார்,துணைதலைவர் குணசேகரன்,மற்றும் நிர்வாகிகள் பாபு,சக்திவேல்,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி,செப்-11
உணவு பாதுகாப்பை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் நடைபயண இயக்கம் நடைபெற்றது.
அணைவருக்கும் மாதம் 35கிலோ உணவு தாணியங்கள் வழங்க உரிய திருத்ததோடு மத்திய அரசு சட்டம் இயற்ற  வேண்டும்.பொது வினியோக முறையை பலபடுத்த வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும்.பாகூர் நெற்களஞ்சியத்தை பாதுகாக்க வேண்டும்.புதுச்சேரியில் அதிகரித்துள்ள கொலை,கொள்ளைகளை கட்டுபடுத்த வேண்டும்.100 நாள் வேலை உறுதி திட்டத்தை துவக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயண இயக்கம் நடைபெற்றது.
பாகூரில் துவங்கிய நடைபயண இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் வே.கு.நிலவழகன் நடைபயண இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார்.காட்டுகுப்பம்,கண்ணிகோவில்,பரிக்கல் பட்டு குருவிநத்தம்,சோரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து   கரையாம்பத்துரில் நிரைவடைந்த நடைபயணத்தில் ,  சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் கலந்து கொண்டு   பேசினார்.கட்சியின் பிரதேச குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன்,கமிட்டி உறுப்பினர்கள் ராமசாமி,கலியன்,செல்வராஜ்,அரிதாஸ்  மற்றும் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் நடைபயண இயக்கத்தில் பங்கேற்றனர்.
Read more...

மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் மறியல் போராட்டம்

0 comments
காமராஜர் சிலை எதிரே மறியல்
புதுச்சேரி,செப்-14
டீசல் விலை உயர்வை  கண்டித்து  மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
டீசல் லிட்டருக்கு   ரூ.5 விலை உயர்த்தியதை மத்திய காங்கிரஸ் திமுக - கூட்டணி அரசு   உடனே  திரும்ப பெற வேண்டும்,கியா° சிலிண்டர் வருடத்திற்கு 6 மட்டுமே வழங்கப்படும்  என்ற அறிவித்துள்ளதை  கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடந்த இம்மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை  தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,கே.முருகன்,நிலவழகன்,ராமச்சந்திரன் இடைகமிட்டி செயலாளர்கள் முருகையன்,சரவணன்,பிரபுராஜ்,பிரதேசக்குழு உறுப்பினர் மதிவாணன்,சிஐடியு நிர்வாகிகள் குணசேகரன்,சிவக்குமார்,சீனிவாசன்,இராமசாமி உள்ளிட்ட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  52பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக உயர்த்திய டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி யும்,மத்திய அரசை கண்டித்தும்,  பதாகைகளை ஏந்தியவாரு  முழக்கமிட்டனர்.




புதுச்சேரி,செப்-14
சுய தொழில் செய்வோருக்கான கம்பியூட்டர்  பயிற்சி முகாம் புதுச்சேரியில் நடைபெற்றது.
இந்திய எரிவாயு நிறுவணம் (கெயில்) மற்றும் வாபஸ்தொண்டு பயிற்சி நிறுவணமும் இணைந்து  சுய தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி முகாம் துவக்கவிழா  நடைபெற்றது.புதுச்சேரி  இலாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில்   வாப்ஸ் தொண்டு நிறுவன பயிற்சி ஒருங்கினைப்பாளர் சந்திரசேகர் அணைவரையும் வரவேற்றார்.விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதாரமையத்தின் ஒருங்கினைப்பாளர் எஸ்.ராமச்சந்திரன்  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.வாபஸ் திட்ட அலுவலர் அசும்தா பிரேமலதா,மற்றும் நிறுவன அலுவலர் கர்ணன் விளிம்பு நிலைவாழ்வாதார மையத்தின் பயிற்சி அமைப்பாளர் கலையரசி ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
ஒரு மாத காலம் காலையும், மாலையும் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க்கிங்  பயிற்சி அளிக்கப்படுகிறது.இத்துவக்கவிழாவில் திரளான ஆண்கள் பெண்கள் பங்கேற்றனர்.
Read more...

ஆர்ப்பாட்டம்

0 comments
புதுச்சேரி,செப்-16
டீசல் விலை உயர்வை  கண்டித்து சிஐடியு  சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு உயர்த்தியுள்ள டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்.ஆண்டுக்கு 6 சிலிண்டர் என்பதை  மத்திய அரசு கைவிட வேண்டும்.புதுச்சேரியில் செயல்படும் சுங்கசாவடியில் வரிசுமையை கட்டுபடுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணாசாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு புதுச்சேரி பிரதேச மினிலோடு கேரியர் சங்க செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார்.ஆட்டோ சங்க கவுரவத்தலைவர் தா.முருகன்,சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,துணை தலைவர் ராஜாங்கம்,இணை செயலாளர் சிவக்குமார்,ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் சீனிவாசன்,மற்றும் கேரியர் சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம்,செபஸ்டின்,ஜோதிபாசு உள்ளிட்ட திரளான ஆட்டோ ஓட்டுநர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.
மாதர்  சங்கம் நுhதன போராட்டம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கங்கள்  சார்பில் டீசல் விலைஉயர்வு,சிலிண்டர் வருடத்திற்கு குறைத்துள்ளதை  கண்டித்து  முத்தியாள்பேட்டை மணிகூண்டு எதிரில்  வீதியில் விறகு அடுப்பு வைத்து  சமைக்கும் போராட்டம் நடைபெற்றது.
மாணவர்,மாதர், வாலிபர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் லெனின்துரை,சந்துரு,ரோஜா,ஜெயலச்சுமி,பாஸ்கர்,ஆனந்து,ரஞ்சித் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

Photo
புதுச்சேரி,செப்-16
அடிப்படை வசதிகளை தீர்க்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் முத்தியால்பேட்டையில் நடைபயணம் நடைபெற்றது.
புதுச்சேரி முத்தியாள்பேட்டை முழுவதும் தேங்கியுள்ள குப்பைகளை உடனே துhர்வாரவேண்டும்.கழிவு நீர்வாய்காளில் ஏற்பட்டுள்ள அடைப்புகை சரிசெய்து கொசு ஒழிப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும்.சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.ரேஷனில் அனைத்து அத்தியாவசிய பொருட்களை தங்குதடையின்றி வழங்கவேண்டும்.சோலை நகர் சமூதாய நலக்கூடம் உடனே திறக்க வேண்டும்.அங்காளம்மன் நகரில் உள்ள சாராயக்கடையை ஊருக்கு வெளியே மாற்ற வேண்டும்.கசாப்புகாரன்தோப்பு பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது.முத்தியால்பேட்டை மணிகூண்டு எதிரில் துவங்கிய பிரச்சாரா பயணத்திற்கு சிபிஎம் கிளை செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் நடைபயணத்தை துவக்கி வைத்து பேசினார்.இறுதியாக மாணவர் சங்க செயலாளர் ஆனந்து முடித்து வைத்து பேசினார்.துணை தலைவர் ரஞ்சித் மற்றும் திரளான பொது மக்கள் இப்பிரச்சார பயணத்தில் பங்கேற்றனர்.
Read more...
Sunday, September 16, 2012

டீசல் விலை உயர்வு கேஸ் சிலிண்டர் வெட்டு சில்லரை வர்த்தகத்தில் அந்நியருக்கு அனுமதி பொதுத்துறை பங்குகள் சூறை மக்கள் மீது யுத்தம் நடத்தும் மன்மோகன் அரசுக்கு கடும் கண்டனம் செப். 20 நாடு தழுவிய கிளர்ச்சி எட்டு கட்சிகள் கூட்டாக அறைகூவல்

0 comments
புதுதில்லி, செப். 14-டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண் டர் வெட்டு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நிறு வனங்களுக்கு அனுமதி, பொதுத்துறை பங்குகள் தனியாருக்கு விற்பனை உள்ளிட்ட ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் மக்கள் விரோத நடவடிக் கைகளுக்கு எதிராக செப்டம்பர் 20ம்தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு எட்டு கட்சிகள் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன. அன்றைய தினம் கடையடைப்பு, மறியல், ஆர்ப்பாட்டம், சிறை நிரப்பும் போராட்டம் என போராட்டங்களில் ஈடுபடுமாறு அனைத்துப் பகுதி மக்களையும் இந்தக் கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன.சமாஜ்வாதி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தெலுங்குதேசம், பிஜு ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம், அகில இந்திய பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்கள் மீது ஒன்றன்பின் ஒன்றாக கொடூரமான தாக்குதல் தொடுத்து வருகிறது.டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள் ளது. இதனால் விலைவாசி உயர்வதோடு, விவசாயி களின் சுமையும் கடுமையாக அதிகரிக்கும். குடும்பம் ஒன்றிற்கு ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் வழங்கப் படும் என்று மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள் ளது. இதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை சந்தை விலையில் இரண்டு மடங்கைவிட கூடுத லாக விலை கொடுத்தே வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய சூப் பர் மார்க்கெட் சங்கிலி நிறுவனங்களை அனுமதிப்பது என்றும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 4 கோடிக்கும் அதிகமானோரும் பெரும் பகுதி நுகர்வோரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.நால்கோ, ஆயில் இந்தியா போன்ற லாபமீட்டும் நவரத்தின பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு களை தனியாருக்கு விற்பதென்றும் அரசு முடிவு செய்துள்ளது. இத்தகைய மக்கள் விரோத நடவடிக் கைகளுக்கு எதிராக போர்க்குரல் முழங்குமாறு அனைத்துப் பகுதிமக்களுக்கும் நாங்கள் அறை கூவல் விடுக்கிறோம்.விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்துப் பகுதி மக்களும் இந்தப் போராட்டத்தில் கைகோர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம்.போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ளோர், சிறு கடைக்காரர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்த மகத்தான போராட்டத்தில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.தேசபக்த உணர்வுள்ள அனைத்து குடிமக்க ளும் போராட்டத்தில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.மக்களுக்கு மேன்மேலும் சுமையை ஏற்றக் கூடிய, அவர்களது வாழ்வாதாரத்தை தகர்க்கக் கூடிய மத்திய அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றுபடுவது அவசியமாகும். கடையடைப்பு, மறியல், ஆர்ப்பாட்டம் மற்றும் சிறைநிரப்பும் போராட்டம் என செப்டம்பர் 20ம்தேதி சக்திமிக்க போராட்டத்தை நடத்துமாறு அறை கூவல் விடுக்கிறோம்.இவ்வாறு கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சமாஜ்வாதி கட்சித் தலைவ முலாயம் சிங் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் எச்.டி.தேவகவுடா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, பிஜு ஜனதாதளத் தலைவர் நவீன்பட்நாயக், தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பி.ஜே.சந்திரசூடன்ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
Read more...
Monday, September 10, 2012

துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பலி சிபிஎம் கண்டனம்

0 comments
துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பலி  சிபிஎம் கண்டனம்
சென்னை, செப். 10-

கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்தோணிசாமி என்ற மீனவர் பலியாகியுள்ள சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் திங்களன்று மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப் பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., அ. சவுந்தரராசன் எம்.எல்.ஏ., பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப உயர்நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். இவர்களை கலைக்க போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.

இம்மக்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்தோணிசாமி என்ற மீனவர் மாண்டுபோன செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக் கிறது வேதனையளிக்கிறது.

காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டு நடவடிக் கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் தங்களு டைய போராட்டத்தை கைவிட்டு சுமுகமான நிலை ஏற்பட ஒத்துழைக்க வேண்டுமெனவும், அரசும் அமை தியை ஏற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கை களையும் எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
Read more...
Monday, September 3, 2012

ஜிப்மர் மருத்துவ சேவை கட்டணத்தை எதிர்த்து சிபிஎம் சார்பில் புதுச்சேரி முழுவதும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

0 comments
புதுசசேரி,செப்ட-2
ஜிப்மர் மருத்துவ சேவை கட்டணத்தை எதிர்த்து சிபிஎம் சார்பில் புதுச்சேரி முழுவதும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ள மருத்துவ சேவைக்கட்டணத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.புதுச்சேரி  காந்திவீதி நேருவீதி சந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் கே.முருகன்,ஆர்.ராஜாங்கம்,கமிட்டி உறுப்பினர்கள் மதிவாணன்,சரவணன்,சிவக்குமார்,அழகர்ராஜ்,மணவாளன்,துரைமுருகன்,உள்ளிட்ட திரளானோர் போராரட்டத்தில் பங்கேற்றனர்.
பாகூர் மேற்கு வீதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு கொம்யூன் செயலாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன்,கமிட்டி உறுப்பினர்கள் ராமசாமி, செல்வராஜ்,கலியன்,அரிதா° உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
வில்லியனுரில் தென்கோபுரவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கொம்யூன் செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் ராமசாமி,பிரதேசக்குழு உறுப்பினர் மணிபாலன்,கமிட்டி உறுப்பினர்கள் ரத்தினவேல்,ராமமூர்த்தி,தியாகராஜன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருபுவனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்த்திற்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் அன்புமணி,சங்கர்,ஆவணியப்பன்,கமிட்டி உறுப்பினர்கள் ராமமூர்த்தி,ஆனந்தன்,தட்சணாமூர்த்தி,வடிவேல்,பிரபாகரன் உள்ளிட்ட திராளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.புதுசசேரி முழுவதும் நடைபெற்ற இப்போராட்டத்தில் கருப்பு கொடியுடன் பங்கேற்று முழுக்கமிட்டனர்.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com