Pages

ShareThis

Powered by Blogger.
 
Sunday, September 16, 2012

டீசல் விலை உயர்வு கேஸ் சிலிண்டர் வெட்டு சில்லரை வர்த்தகத்தில் அந்நியருக்கு அனுமதி பொதுத்துறை பங்குகள் சூறை மக்கள் மீது யுத்தம் நடத்தும் மன்மோகன் அரசுக்கு கடும் கண்டனம் செப். 20 நாடு தழுவிய கிளர்ச்சி எட்டு கட்சிகள் கூட்டாக அறைகூவல்

0 comments
புதுதில்லி, செப். 14-டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண் டர் வெட்டு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நிறு வனங்களுக்கு அனுமதி, பொதுத்துறை பங்குகள் தனியாருக்கு விற்பனை உள்ளிட்ட ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் மக்கள் விரோத நடவடிக் கைகளுக்கு எதிராக செப்டம்பர் 20ம்தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு எட்டு கட்சிகள் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன. அன்றைய தினம் கடையடைப்பு, மறியல், ஆர்ப்பாட்டம், சிறை நிரப்பும் போராட்டம் என போராட்டங்களில் ஈடுபடுமாறு அனைத்துப் பகுதி மக்களையும் இந்தக் கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன.சமாஜ்வாதி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தெலுங்குதேசம், பிஜு ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம், அகில இந்திய பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்கள் மீது ஒன்றன்பின் ஒன்றாக கொடூரமான தாக்குதல் தொடுத்து வருகிறது.டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள் ளது. இதனால் விலைவாசி உயர்வதோடு, விவசாயி களின் சுமையும் கடுமையாக அதிகரிக்கும். குடும்பம் ஒன்றிற்கு ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் வழங்கப் படும் என்று மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள் ளது. இதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை சந்தை விலையில் இரண்டு மடங்கைவிட கூடுத லாக விலை கொடுத்தே வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய சூப் பர் மார்க்கெட் சங்கிலி நிறுவனங்களை அனுமதிப்பது என்றும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 4 கோடிக்கும் அதிகமானோரும் பெரும் பகுதி நுகர்வோரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.நால்கோ, ஆயில் இந்தியா போன்ற லாபமீட்டும் நவரத்தின பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு களை தனியாருக்கு விற்பதென்றும் அரசு முடிவு செய்துள்ளது. இத்தகைய மக்கள் விரோத நடவடிக் கைகளுக்கு எதிராக போர்க்குரல் முழங்குமாறு அனைத்துப் பகுதிமக்களுக்கும் நாங்கள் அறை கூவல் விடுக்கிறோம்.விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்துப் பகுதி மக்களும் இந்தப் போராட்டத்தில் கைகோர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம்.போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ளோர், சிறு கடைக்காரர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்த மகத்தான போராட்டத்தில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.தேசபக்த உணர்வுள்ள அனைத்து குடிமக்க ளும் போராட்டத்தில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.மக்களுக்கு மேன்மேலும் சுமையை ஏற்றக் கூடிய, அவர்களது வாழ்வாதாரத்தை தகர்க்கக் கூடிய மத்திய அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றுபடுவது அவசியமாகும். கடையடைப்பு, மறியல், ஆர்ப்பாட்டம் மற்றும் சிறைநிரப்பும் போராட்டம் என செப்டம்பர் 20ம்தேதி சக்திமிக்க போராட்டத்தை நடத்துமாறு அறை கூவல் விடுக்கிறோம்.இவ்வாறு கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சமாஜ்வாதி கட்சித் தலைவ முலாயம் சிங் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் எச்.டி.தேவகவுடா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, பிஜு ஜனதாதளத் தலைவர் நவீன்பட்நாயக், தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பி.ஜே.சந்திரசூடன்ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com