Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, September 17, 2012

ஆர்ப்பாட்டம்

0 comments
புதுச்சேரி,செப்-16
டீசல் விலை உயர்வை  கண்டித்து சிஐடியு  சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு உயர்த்தியுள்ள டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்.ஆண்டுக்கு 6 சிலிண்டர் என்பதை  மத்திய அரசு கைவிட வேண்டும்.புதுச்சேரியில் செயல்படும் சுங்கசாவடியில் வரிசுமையை கட்டுபடுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணாசாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு புதுச்சேரி பிரதேச மினிலோடு கேரியர் சங்க செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார்.ஆட்டோ சங்க கவுரவத்தலைவர் தா.முருகன்,சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,துணை தலைவர் ராஜாங்கம்,இணை செயலாளர் சிவக்குமார்,ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் சீனிவாசன்,மற்றும் கேரியர் சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம்,செபஸ்டின்,ஜோதிபாசு உள்ளிட்ட திரளான ஆட்டோ ஓட்டுநர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.
மாதர்  சங்கம் நுhதன போராட்டம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கங்கள்  சார்பில் டீசல் விலைஉயர்வு,சிலிண்டர் வருடத்திற்கு குறைத்துள்ளதை  கண்டித்து  முத்தியாள்பேட்டை மணிகூண்டு எதிரில்  வீதியில் விறகு அடுப்பு வைத்து  சமைக்கும் போராட்டம் நடைபெற்றது.
மாணவர்,மாதர், வாலிபர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் லெனின்துரை,சந்துரு,ரோஜா,ஜெயலச்சுமி,பாஸ்கர்,ஆனந்து,ரஞ்சித் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

Photo
புதுச்சேரி,செப்-16
அடிப்படை வசதிகளை தீர்க்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் முத்தியால்பேட்டையில் நடைபயணம் நடைபெற்றது.
புதுச்சேரி முத்தியாள்பேட்டை முழுவதும் தேங்கியுள்ள குப்பைகளை உடனே துhர்வாரவேண்டும்.கழிவு நீர்வாய்காளில் ஏற்பட்டுள்ள அடைப்புகை சரிசெய்து கொசு ஒழிப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும்.சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.ரேஷனில் அனைத்து அத்தியாவசிய பொருட்களை தங்குதடையின்றி வழங்கவேண்டும்.சோலை நகர் சமூதாய நலக்கூடம் உடனே திறக்க வேண்டும்.அங்காளம்மன் நகரில் உள்ள சாராயக்கடையை ஊருக்கு வெளியே மாற்ற வேண்டும்.கசாப்புகாரன்தோப்பு பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது.முத்தியால்பேட்டை மணிகூண்டு எதிரில் துவங்கிய பிரச்சாரா பயணத்திற்கு சிபிஎம் கிளை செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் நடைபயணத்தை துவக்கி வைத்து பேசினார்.இறுதியாக மாணவர் சங்க செயலாளர் ஆனந்து முடித்து வைத்து பேசினார்.துணை தலைவர் ரஞ்சித் மற்றும் திரளான பொது மக்கள் இப்பிரச்சார பயணத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com