![]() |
| காமராஜர் சிலை எதிரே மறியல் |
டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
டீசல் லிட்டருக்கு ரூ.5 விலை உயர்த்தியதை மத்திய காங்கிரஸ் திமுக - கூட்டணி அரசு உடனே திரும்ப பெற வேண்டும்,கியா° சிலிண்டர் வருடத்திற்கு 6 மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவித்துள்ளதை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடந்த இம்மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,கே.முருகன்,நிலவழகன்,ராமச்சந்திரன் இடைகமிட்டி செயலாளர்கள் முருகையன்,சரவணன்,பிரபுராஜ்,பிரதேசக்குழு உறுப்பினர் மதிவாணன்,சிஐடியு நிர்வாகிகள் குணசேகரன்,சிவக்குமார்,சீனிவாசன்,இராமசாமி உள்ளிட்ட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 52பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக உயர்த்திய டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி யும்,மத்திய அரசை கண்டித்தும், பதாகைகளை ஏந்தியவாரு முழக்கமிட்டனர்.
புதுச்சேரி,செப்-14
சுய தொழில் செய்வோருக்கான கம்பியூட்டர் பயிற்சி முகாம் புதுச்சேரியில் நடைபெற்றது.
இந்திய எரிவாயு நிறுவணம் (கெயில்) மற்றும் வாபஸ்தொண்டு பயிற்சி நிறுவணமும் இணைந்து சுய தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி முகாம் துவக்கவிழா நடைபெற்றது.புதுச்சேரி இலாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் வாப்ஸ் தொண்டு நிறுவன பயிற்சி ஒருங்கினைப்பாளர் சந்திரசேகர் அணைவரையும் வரவேற்றார்.விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதாரமையத்தின் ஒருங்கினைப்பாளர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.வாபஸ் திட்ட அலுவலர் அசும்தா பிரேமலதா,மற்றும் நிறுவன அலுவலர் கர்ணன் விளிம்பு நிலைவாழ்வாதார மையத்தின் பயிற்சி அமைப்பாளர் கலையரசி ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
ஒரு மாத காலம் காலையும், மாலையும் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க்கிங் பயிற்சி அளிக்கப்படுகிறது.இத்துவக்கவிழாவில் திரளான ஆண்கள் பெண்கள் பங்கேற்றனர்.
