Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, September 21, 2012

இடதுசாரிகட்சிகள் அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரியில் சாலைகள் வெறிச்சோடி காணப்பபட்டது

0 comments

புதுச்சேரி,செப்-20
இடதுசாரிகட்சிகள் அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரியில் சாலைகள் வெறிச்சோடி காணப்பபட்டது.

டீசல் லிட்டருக்கு ரூ.5 ஆக உயர்த்தியது.சிலிண்டர் ஆண்டுக்கு 6மட்டுமே வழங்குவது.சிறுவணிகத்தில் அன்னியமுதலீடு  அனுமதிப்பது உள்ளிட்ட மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் முடிவுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக்,புரட்சிகர சோஸலிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகட்சிகள் சார்பில் வியாழன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு விடுதலைசிறுத்தைகள்,தேசிய முற்போக்கு திராவிட கழகம்,புதுச்சேரி வர்த்தகர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்திருந்தது.

சாலைகள் வெறிச்சோடியது.

புதுச்சேரியில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் நகரத்தில் உள்ள  நேருவீதி,காந்திவீதி,அண்ணாசாலை,காமராஜர் சாலை,பெரிய மார்க்கட்,சின்னமணிகூண்டு,முத்தியாள்பேட்டை,நெல்லித்தோப்பு,முதலியார்பேட்டை,சாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்காடிகள்,கடைகள்,திரையரங்குகள் உள்ளிட்டவைகள் முற்றிலும் மூடப்பட்டிருந்தன.நகரத்தில் ஆட்டோக்கள்,டெம்போக்கள்,தனியார் பேருந்து முற்றிலும் இயங்காததால் புதிய பேருந்துநிலையம்,சாலைகள் வெறிசோடிகாணப்பட்டது.ஓரி  இரு அரசு பேருந்துகள்  போலீசார் பாதுகாப்போடு இயங்கினாலும் பொது மக்கள் வரத்து முற்றிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளுக்கு விடுமுறை

தனியார் பள்ளிகள்,கல்லுhரிகள் இயங்கவில்லை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிந்ததால் வியாழன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தையும் வேறு தேதிக்கு மாற்றப்பட்டது.அரசு பள்ளி பேருந்துகள் இயங்காததால் அரசு பள்ளி மாணவர்கள் வரத்து குறைவாக இருந்தது.
இடது சாரிகட்சி தலைவர்கள் மறியல்
காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,கே.முருகன்,ராமச்சந்திரன்,இராமசாமி,சுமதி,சிபிஐ தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன்,நிர்வாகிகள் முருகன்,ஆனந்து,சேது செல்வம்,ஏகாம்பரம்,ஆர்எஸ்பி மாநில தலைவர் லெனின்,விடுதலைசிறுத்தைகள் மாநில அமைப்பாளர் பாவாணன்,தேமுதிக மாநில நிர்வாகி தனசேகரன் உட்பட 6பெண்கள் உள்ளிட்ட 182 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.இதேப்போல் பாகூரில் சிபிஎம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 40பேரும்,மதகடிப்பட்டில் கொம்யூன் கமிட்டி செயலாளர் சரவணன் தலைமையில் 42பேரும் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதானர்கள்.பார்வர்டு கட்சி மாநில தலைவர் முத்து தலைமையில் ரெயிலை மறிக்க சென்ற 10பேரை போலீசார் கைது  செய்தனர்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதேப்போல் அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் கிளை தலைவர் அன்பரசி ஜூலியட்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  முகவர்கள் கல்விக்குழு தலைவர் ராம்ஜி கண்டன உரையாற்றினார்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com