Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, August 23, 2011

எம்.கே.பாந்தே மறைவையொட்டி புதுச்சேரியில் இரங்கள் கூட்டம்

0 comments


புதுச்சேரி =ஆக 21

சிஜடியு ஸ்தாபக தலைவர்களுள் ஒருவரும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான எம்.கே.பாந்தே மறைவையொட்டி புதுச்சேரியில் இரங்கள் கூட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு சிஜடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,ஏஜடியுசி மாநில பொதுச்செயலாளர் அபிஷேகம்,டியுசிசி தலைவர் முத்து,யுடியுசி தலைவர் சம்பத்,அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் சி.எச்.பாலமோகனன்,ஆசிரியர் சங்க தலைவர் ஜெயராமன்,பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தலைவர் கொளஞ்சியப்பன்,எல்ஜசி ஊழியர் சங்க தலைவர் ராம்ஜி,மற்றும் சிஜடியு நிர்வாகிகள் நிலவழகன்,ராஜாங்கம்,சிவக்குமார்,பாபு உள்ளிட்ட திரளானோர் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு மறைந்த தலைவர் எம்.கே.பாந்தே அவர்களின் உருவபடத்திற்கு மலர்துhவி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.

Read more...

பாகூரில் கட்டுமான தொழிலாளர்கள் பேரணி - மாநாடு

0 comments








புதுச்சேரி ஆக 22

முறைச்சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி BONUS ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி பிரதேச கட்டுமான தொழிலாளர் சங்க மாநாடு அரசை வலியுறுத்தியுள்ளது.

சிஜடியு புதுச்சேரி பிரதேச கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 2வது பிரதேச மாநாடு பாகூரில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு சங்கத்தின் கவுரவ தலைவர் நிலவழகன் தலைமை தாங்கினார். மாநாட்டு பிரதிநிதிகளை நிர்வாகி சேகர் வரவேற்றார்.முன்னதாக சங்கத்தின் கொடியை இனைசெயலாளர் ஜெசதீசன் ஏற்றிவைத்தார்.இம்மாநாட்டை சிபிஎம் பிரதேசசெயலாளர் வி.பெருமாள் துவக்கிவைத்து பேசினார்.சிஜடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி மாநாட்டை வாழ்த்தி பேசினார்.சங்கத்தின் வேலை அறிக்கையை பொதுச்செயலாளர் கலியன் சமர்பித்தார்.இருதியாக சிஜடியு தமிழ்மாநில தலைவர் ஆர்.சிங்காரவேல் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.மாநாட்டில் சிஜடியு நிர்வாகி சிவக்குமார்,சிபிஎம் பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,முருகையன்,தமிழ்ச்செல்வன்,உள்ளிட்ட திரளான கட்டுமான தொழிலாளர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.முன்னதாக அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.5ஆயிரம் சிங்காரவேல் அவர்களிடம் வழங்கப்பட்டது.

புதிய நிர்வாகிகள்

சங்கத்தின் புதிய தலைவராக நிலவழகன்,பொதுச்செயலாளராக கலியன்,பொருளாளராக செல்வராசு உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் 42 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மாணங்கள்

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,முறைச்சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பன்டிகையோட்டி ரூ.2ஆயிரம் போன° வழங்க வேண்டும்.கட்டுமான பொருட்களின் விலை உயர்வை மாநில அரசு கட்டுபடுத்த வேண்டும்.அத்திய வாசிய பண்டங்களின் விலைஉயர்வை மத்திய,மாநில அரசுகள் கட்டுபடுத்த வேண்டும்.தொழிலாளர் ஆலோசனை வாரியத்தில் சிஜடியு விற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும்.விலைநிலங்களை பாதுகாக்க உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அக்டோபர் 10ஆம் தேதி சட்டமன்றத்தை நோக்கி பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read more...

பிரதமரையும் உளளடக்கிய லோக்பால்

0 comments




புதுச்சேரி ஆக 19

பிரதமரையும் உளளடக்கிய லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு தாக்கல் செய்கின்ற லோக்பால் மசோதவில் பிரதமரையிம் விசாரணைக்கு உட்படுத்தும் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதபோராட்டம் நடத்திய அன்னாஹசாரேயை வலுகட்டாயமாக கைது செய்த மத்திய அரசை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காந்திவீதியில் நடந்த இப்போராட்டத்திற்கு சிஜடியு மாவட்ட செயலாளர் கே.முருகன் தலைமை தாங்கினார்.சிஜடியு ஆட்டோ சங்ககவுரத்தலைவர் தா.முருகன்,மாவட்ட தலைவர் ராமசாமி,அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் ஆனந்தராஜ்,பொதுச்செயலாளர் புகழேந்தி,அறிவியல் இயக்கத் தலைவர்கள் தட்சணாமூர்த்தி,ராமச்சந்திரன்,பிஎ°என்எல் ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் கொளஞ்சியப்பபன்,எல்ஜசி ஊழியர் சங்க தலைவர் ராம்ஜி,சிஜடியு நிர்வாகிகள் ராஜாங்கம், நிலவழகன்,சீனுவாசன்,குணசேகரன்,சிவக்குமார்,உள்ளிட்ட திரளான தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று ஊழலுக்கு எதிராகவும், மத்திய அரசை எதிர்த்து முழக்கமிட்டனர்.



புதுச்சேரி ஆக 19

முத்தியால்பேட்டையில் அடிப்படைபிரச்சனைகளை தீர்க்ககோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

ஹிரங்கவிலாஸ் தோட்டத்தில் குடியிருக்கும் மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கவேண்டும்.உடனடியாக அப்பகுதியில் பொதுகழிவரை கட்டி கொடுக்கவேண்டும்.சின்னாத்தா அரசு பள்ளி மதில் சுவரை உயரபடுத்த வேண்டும்.மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள சாராயகடையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டம் நடைபெற்றது.

மணிகூண்டு எதிரில் நடந்த இக்கூட்டத்திற்கு கிளைச்செயலாளர் ரா.சரவணன் தலைமை தாங்கினார்.சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நகரகமிட்டி செயலாளர் சீனுவாசன்,பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.டிஒய்எப்ஜ பிரதேச தலைவர் சந்துரு,கமிட்டி உறுப்பினர் ரமேஷ்,உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

படம் உள்ளது



1. சிபிஎம் புதுச்சேரி உழவர்கரை நகரகமிட்டி சார்பில் சேகரிக்கப்பட்ட 36 தீக்கதிர் ஆண்டு சந்தாவும், 2 ஜந்தாண்டிற்கான சந்தா தொகையையும் சேர்த்து சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் இடம் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் லெனின்துரை வழங்கினார்.அருகில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,கலிவரதன்,கமிட்டி உறுப்பினர்கள் நடராஜன்,சத்தியா,பா°கர் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.



Read more...
Thursday, August 18, 2011

துனைநிலை ஆளுநர் இக்பால்சிங் உரையை கண்டித்து வாயில் கருப்பு துணிகட்டிகொண்டு கண்டன போராட்டம்

0 comments


புதுச்சேரி ஆக 18

புதுச்சேரி துனைநிலை ஆளுநர் இக்பால்சிங் உரையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாயில் கருப்பு துணிகட்டிகொண்டு கண்டன போராட்டம் நடைபெற்றது.

கருப்புபண பதுக்கள் பேர்வழி ஹசன்ஹலிக்கு போலி பாஸ்போர்ட் எடுக்க உதவிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள புதுச்சேரி துணைநிலை ஆளநர் இக்பால்சிங் சட்டசபையில் பட்ஜெட் உரையை வாசிப்பதை கண்டித்தும், இக்பால்சிங்கை மத்திய அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும் சுனாமி குடியிருப்பு களை கட்டியதில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டில் சிபிஜ யால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் ராகேஷ்சந்திராவை உடனடியாக பதவி நீக்கம் செய்யக்கோரி மார்க்சி°ட் கட்சி சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது.

அண்ணாசிலை எதிரில் இருந்து துவங்கி சட்டமன்றத்தின் எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள் தலைமை தாங்கினார்.சிபிஎம் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன்,தா.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,முருகன்,கலிவரதன்,நிலவழகன்,உலகநாதன் இடைகமிட்டி செயலாளர்கள்,பிரதேசக்குழு உறுப்பினர்கள்,உள்ளிட்ட திரளான கட்சி உறுப்பினர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக முழக்கம் மிட்டனர்.

முன்னதாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஆளுநர் இக்பால்சிங்,மாவட்ட ஆட்சியர் ஆகியோரது உருவபடங்களுடன் வாயில் கருப்பு துணிகட்டிகொண்டு சட்டமன்றத்தை நோக்கி ஊர்வலமாக வந்த போது சிபிஎம் தொன்டர்களிடம் இருந்து காவல் துறையினர் ஆளுநர்,ஆட்சியரின் உருவபடங்களை வலுகட்டாயமாக பிடுங்கினார்கள்.பிடுங்கிய படங்களை பத்திரமாக காவல்துறை வாகனத்தில் எடுத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more...

தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

0 comments


புதுச்சேரி ஆக 14

புதுச்சேரி காந்திவீதியில் நடந்த தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் துவக்கிவைத்து பேசினார்.இவ்வியக்கத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,முருகன்,நகரகமிட்டி செயலாளர் சீனிவாசன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பிரபுராஜ்,சுமதி மற்றும் சிஜடியு நிர்வாகிகள் குணசேகரன்,சிவக்குமார்,மற்றும் மணவாளன்,ரமேஷ்,சரவணன்,முகவர்கள் மனவாளன்,ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Read more...

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமையோடு கூடுதல் சுயாட்சி அதிகாரம் கோரி

0 comments


புதுச்சேரி ஆக 10

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமையோடு கூடுதல் சுயாட்சி அதிகாரம் கோரி மார்க்சி°ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் நான்கு மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போர்க்குற்றம் புரிந்த ராஜபக்சே மீது ஜ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.வீடுகளை இழந்த 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அவர்களது வாழ்விடங்களுக்கு அனுப்பிவைத்து புனர்வாழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போரட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி

புதுச்சேரி அண்ணாசாலையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரகமிட்டி செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.உழவர் கரை நகர செயலாளர் லெனின்துரை முன்னிலை வகித்தார்.மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள்.மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினகள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானேர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

பாகூர்

பாகூர் மேற்கு வீதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பிரதேசக்குழு உறுப்பினர் த.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.வில்லியனூர் கமிட்டி செயலாளர் முருகையன் முன்னிலைவகித்தார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,கொம்யூன் செயலாளர் பத்மநாபன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

மதகடிப்பட்டு

மதகடிப்பட்டு கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிரதேசக்குழு உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர்கள் கலிவரதன்,ராமசாமி,கொம்யூன் செயலாளர் உலகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இதில் பிரதேசக்குழு,கொம்யூன்குழு உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.இதேப்போல் காரைக்காலில் நடந்த போராட்டத்திற்கு வட்டச்செயலாளர் வின்சென்ட் தலைமை தாங்கினார்.
Read more...
Thursday, August 4, 2011

சிறப்புக்கூறு திட்ட நிதி முழுமையும் தலித்மக்களின் மேம்பாட்டிற்கே செலவு செய்திடக்கோரி

0 comments

புதுச்சேரி ஆக 3
சிறப்புக்கூறு திட்ட நிதி முழுமையும் தலித்மக்களின் மேம்பாட்டிற்கே செலவு செய்திடக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலித் சிறப்புக்கூறு துணைத்திட்டநிதியை வேறுத்திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்வதை நிறுத்த வேண்டும்.2010-2011 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகையை தலித் மாணவர்களுக்கு உடணடியாக வழங்க வேண்டும்.வீடுகட்டும் மானியம் உள்ளிட்ட தலித் மக்கள் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.கடந்த 10ஆண்டுகளாக சிறப்புக்கூறு திட்ட நிதி அமலாக்கம் குறித்து புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை முன்பு நடந்த போராட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுவைத்தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேசசெயலாளர் வி.பெருமாள்கண்டன உரையாற்றினார்.இப்போராட்டத்தில் முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் தலித்சுப்பையா, பொருளாளர் என்.கொளஞ்சியப்பன், கலிவரதன்- விதொச,முருகன்-சிஜடியு,நிலவழகன்,பத்மாநாபன்-விவசாயிகள் சங்கம்,சந்துரு-டிஒய்எப்ஜ,ஆனந்து,ரஞ்சித்-எ°எப்ஜ உட்பட வெகு ஜன இயக்கங்கிளின் தலைவர்கள் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இருதியாக துறையின் இயக்குநர் அன்பழகனை சந்தித்து தலைவர்கள் மனு அளித்தனர்.மனுவை பெற்று கொண்ட இயக்குநர் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உடனடியாக வழங்கப்படும். அதேப்போல் மற்றதிட்டங்களையும் விரைவில் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
Read more...
Tuesday, August 2, 2011

ஜூலை 30 தியாகிகள் தினத்தை முன்னிட்டு இந்திய தொழிற் சங்க மையம் சிஜடியு சார்பில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

0 comments

புதுச்சேரி ஜூலை 30
ஜூலை 30 தியாகிகள் தினத்தை முன்னிட்டு இந்திய தொழிற் சங்க மையம் சிஜடியு சார்பில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது.
எட்டு மணிநேர வேலை உரிமையை அமல் படுத்தக்கோரி 1936 ஆம் ஆண்டு ஜூலை 30ல் போராட்டம் நடத்திய புதுச்சேரி சவானா ஆலை (சுதேசி பஞ்சாலை) தொழிலாளர்களில் 12 தொழிலாளர்களை பிரேஞ்சு ராணுவம் சுட்டு கொன்றது.மறைந்த அத்தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தொழிற்சங்கங்கள் சார்பில் ஜூலை 30 தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி கடலுhர் சாலையில் அமைந்துள்ள ஜூலை 30 தியாகிகள் உருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.இந் நிகழ்சிக்கு சிஜடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,சிஜடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,நிர்வாகிகள் ராஜாங்கம்,நிலவழகன்,சிவக்குமார்,குணசேகரன்,சீனுவாசன்,ரவிச்சந்திரன்,கலியன்,சுமதி,நாராயணன், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னதாக நெல்லித்தோப்பு சுப்பையா சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Read more...

ஊழலை தடுக்க வலுவான லோக்பால் சட்டம் உருவாக்ககோரி

0 comments

புதுச்சேரி
புதுச்சேரி தபால் நிலையம் முன்பு நடந்த தர்ணா போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ஆனந்து,மார்க்சிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகரசெயலாளர் லெனின்துரை ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஜ மாநில செயலாளர் நாரா.கலைநாதன் தர்ணாவை துவக்கி வைத்து பெசினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,சிபிஜ தேசியக்குழு உறுப்பினர் விசுவநாதன் ஆகியோர் பேசினார்கள். இடது சாரிகட்சி தலைவர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,சீனுவாசன்,பிரபுராஜ்,சலீம்,சேதுசெல்வம்,பூபதி,சரளா உள்ளிட்ட திரளானோர் இப்போரட்டத்தில் பங்கேற்றனர்.
மதகடிப்பட்டு
மதகடிப்பட்டு கடை தெருவில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு சிபிஎம் கொம்யூன் செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார்.சிபிஜ திருபுவனை தொகுதி செயலாளர் டி.பி.ரவி முன்னிலை வகித்தார்.சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கலிவரதன்,சிபிஜ மாநில செயற்குழு உறுப்பினர் கீதநாதன் ஆகியோர் பேசினார்கள்.இத்தர்ணாவில் திரளான இடது சாரிகட்சியினர் பங்கேற்றனர்.
பாகூர்
பாகூர் கடைத்தெருவில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு சிபிஎம் கொம்யூன் செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.சிபிஜ பாகூர் தொகுதி செயலாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார்.சிபிஎம் செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,சிபிஜ மாநில செயற்குழு உறுப்பினர் அபிnஷ்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.தமிழ்ச்செல்வன்,ராஜா உள்ளிட்ட திரளான இடதுசாரிகட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.
வில்லியனூர்
வில்லியனூர் தென்கோபுர வீதியில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு சிபிஜ தொகுதி செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சிபிஎம் கொம்யூன் செயலாளர் முருகையன் முன்னிலை வகித்தார்.சிபிஜ மாநில செயற்குழு உறுப்பினர் இராமமூர்த்தி,சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஜி.ராமசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.மணிபாலன்,அந்துவான் உள்ளிட்ட இரு கட்சிகளை சேர்ந்த திரளானோர் இப்போரட்டத்தில் பங்கேற்றனர்.
புதுச்சேரி முழுவதும் நடந்த இத்தர்ணா போராட்டத்தில் ஆயிரத்திர்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கட்சியின் சார்பில் புதுச்சேரி முழுவதும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
நீதித்துறையின் உயர்மட்டத்தில் ஊழலை தடுக்க தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்க வேண்டும்.2ஜி ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழலில் தொடர்புள்ள அமைச்சர்கள் அதிகாரிகளை தண்டிக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.தேர்தல்களில் பணபலத்தை தடுக்க விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்த தேர்தல் சீர்திருத்தங்களை அமலாக்க வேண்டும்.வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பதுக்கியுள்ள கருப்பு பணத்தை கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பன கோரிக்கைகள் ஊழலுக்கு எதிரான இத்தர்ணா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com