Pages

ShareThis

Powered by Blogger.
 
Sunday, December 19, 2010

பெட்ரோல் விலை உயர்வை திரும்பபெறக்கோரி சிஜடியூ ஆட்டோ சங்கத்தின் =சார்பில் ஆட்டோவை கயிற்றால் கட்டி நூதன போரட்டம்

0 comments


புதுச்சேரி டிச 16
மத்திய காங்கிர°-திமுக அரசின் பெட்ரோல் விலை உயர்வை திரும்பபெறக்கோரி சிஜடியூ ஆட்டோ சங்கத்தின் =சார்பில் ஆட்டோவை கயிற்றால் கட்டி நூதன போரட்டம் புதுவையில் நடைபெற்றது.
பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் மூன்று உயர்த்தியுள்ள மத்திய அரசைக் கண்டித்தும் தொடர்ந்து எட்டு முறை பெட்ரோல் விலை உயர்த்தி இருப்பதை திரும்பப்பெறக் கோரியும் நூதன முறையில் இப்போராட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி காமராஜர் சிலை எதிரில் நடந்த இப்போராட்டத்திற்கு சிஐடியூ பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். பொது செயலாளர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் கௌரவத் தலைவர் த. முருகன் சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள், சிஐடியூ மாவட்ட தலைவர்கள் ராமசாமி, முருகன், நிலவழகன், குணசேகரன், சிவக்குமார் ஆட்டோ சங்க நிர்வாகிகள் மது, மதிவாணன், சேகர், மணவாளன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆட்டோவை கயிற்றால் கட்டி இழுத்துச் சென்று ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.
படம் உள்ளது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com