Pages

ShareThis

Powered by Blogger.
 
Sunday, December 19, 2010

ஊழல்களைக் கண்டித்து தெருமுனை பிரச்சாரம்

0 comments



மத்திய காங்கிர° - திமுக அரசின் °பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டி ஊழல்களைக் கண்டித்து மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.
புதுச்சேரி காங்கிர° அரசு மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய வேட்டி சேலையினை கொள்முதல் செய்வதில் ஊழல் நடைப்பெற்றுள்ளது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். °பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் நடைப்பெற்றது.
முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு கட்சியின் நகர கமிட்டி உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிபிஎம் மாநில குழு உறுப்பினர் தா. முருகன், செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம், பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ், கிளை செயலாளர் சரவணன் ஆகியோர் பேசினார்கள். நகர கமிட்டி செயலாளர் சீனுவாசன், கமிட்டி உறுப்பினர்கள் மதிவாணன், மது உள்ளிட்ட திரளானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதேப்போல் சுதேசி மில் எதிரில் நடந்த தெருமுனைப் பிரச்சாரத்தில் பிரதேச செயலாளர் வெ. பெருமாள், சிஐடியூ மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன் ஆகியோர் பங்கேற்ற பேசினார்கள்.
படம் உள்ளது

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com