Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, February 15, 2013

வினோதினி உடலுக்கு புதுச்சேரியில் கன்னீர் அஞ்சலி.

0 comments
புதுச்சேரி,பிப்-14
வினோதினி உடலுக்கு புதுச்சேரியில் கன்னீர் அஞ்சலி.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினி சிகிச்சை பலனிக்காமல் செவ்வாய்கிழமை இறந்தார்.இந்நிலையில் அவரது சொந்த ஊரான காரைக்காலுக்கு எடுத்து செல்லும் வழியில் புதுச்சேரிக்கு வந்த வினோதினி உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரி ராஜிவ்காந்தி மகப்பேறு மருத்துவமனை எதிரில் நடைபெற்றது.
இரங்கல் கூட்டம்
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி நலத்துறை அமைச்சர் ராஜவேல்,உள்ளாட்சித்துறை அமைச்சர் பன்னீர் செல்வம்,எதிர்கட்சி தலைவர் வைத்தியலிங்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் தா.முருகன்,அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன்,மற்றும் மாதர்,வாலிபர்,மாணவர்  சங்கங்களின் தலைவர்கள் , ஜனநாயக அமைப்புகளை கொண்டவர்கள்  திரளானோர்  பங்கேற்று வினோதினியின் உடலுக்கு மலர் வலையம் வைத்து கன்னீர் அஞ்சலி செலுத்தினர்.பின்னர் இரண்டு நிமிடம்  இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.  பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக உறுதி மொழி நிகழ்சி நடைபெற்றது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com