புதுச்சேரி,பிப்-22

காவல்நிலையத்தில் தொழிலாளி அடித்து கொலை ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.


மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு, புதுச்சேரி தவளக்குப்பத்தில் மினிலோடு கேரியர் ஓட்டிவந்தவர் மணி( எ) ரவி இவர் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தவளப்குப்பம் காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மணைவி கலைச்செல்வி  காவல்நிலையத்தில் சென்று தனது கனவர் எங்கே என்று விசாரித்துள்ளார். அதற்கு அங்கிருந்த காவலர்கள் பதில் ஏதும் சொல்லாததால் தனது உறவினர் மூலம் அக்கம் பக்கம் தேடிபார்த்ததில் காவல்நிலையம் பின்பு ஒரு மரத்தில் மர்மமான முறையில் மணி தூக்கில் தொங்கியுள்ளார்.மர்மமான முறையில் இறந்து கிடந்த மணி(எ)ரவி க்கு மஞ்சுலா (15வயது),மைதிலி (9 வயது) ஆகிய இரண்டு பெண்குழந்தைகளும்,குமார் (வயது 7) ஒரு மகனும் உள்ளனர்.
காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மணி மர்மாக இறந்துள்ளார்.அவர் தற்கொலை செய்வதற்கான  எந்த  வித முகாந்திரம் இல்லாதபோது அவரை காவல்நிலையத்தில்  வைத்து அடித்து கொள்ளப்பட்டுள்ளார் என்ற தகவல் வருகிறது.எனவே இது குறித்து உண்மை குற்றவாலிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில்  ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட அவரது குடுப்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.10லட்சம் உடனே புதுவை அரசு வழங்க வேண்டும்.இல்லை என்றால் பிப்-28ல் தவளக்குப்பம் காவல்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும்.இவ்வாறு கூறினார்.பேட்டியின் போது இறந்த  மணியின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உடன் இருந்தனர்.


புதுச்சேரி,பிப்-22
 மாற்று கொள்கைகளை முன்வைத்து பிப்ரவரி 24ல் மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரியில் பிரச்சாரம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
புதுச்சேரியில் நிலவும் நிதி நெருக்கடி,நீதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடு,மாநில தலைமை செயலாளர் மாற்றம் உள்ளிட்டவைகள் மாநில அரசின் பிரச்சனையாக மார்க்சி°ட் கட்சி பார்க்கவில்லை.இது மக்கள் பிரச்சனை எனவே மத்திய அரசின் இத்தகைய அனுகுமுறையை மார்க்சி°ட் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது.மேலும் கடந்த காங்கிர° ஆட்சியில் நடைபெற்ற பாதாளசாக்கடை திட்டம்,குப்பை அள்ளும் திட்டம் ஆகியவைகளில் நடந்துள்ள ஊழல்  முறைகேடுகள் தொடர்பாக மாநில அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.எனவே இக்கோரிக்ககைளை முன்வைத்தும் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 27 ஆம் தேதியிலிருந்து மார்ச் 10 ஆம்தேதி வரை புதுச்சேரி முழுவதும் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெறுகிறது. அகில இந்திய துணை பிரச்சாரம் துவக்கவிழா அணைவருக்கும் உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்த வேண்டும்.சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதிப்பதை எதிர்த்தும்,பெண்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிஷன் பரிந்துறைகளை நிiவேற்றக்கோரியும்  அகில இந்திய அளவில பிரச்சாரபயணம் நடைபெறுகிறது.இந்த பிரச்சாரத்தின் நோக்கங்களை வலியுறுத்தி புதுச்சேரி,கடலூர்,விழுப்புரம்,திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் துணைப்பிரச்சாரம் நான்கு தினங்களுக்கு நடைபெறுகிறது.பிரச்சாரத்தின் இருதி நாளான பிப்ரவரி 28ல் விழுப்புரத்தில் நிறைவு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.புதுச்சேரியில் பிப்ரவரி 24 ல் துவங்கும் பிரச்சார துவக்கவிழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி,தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன்,கனகராஜ்,மாநிலக்குழு உறுப்பினர் பாலபாரதி, எம்எல்ஏ மற்றும் நான்கு மாவட்ட செயலாளர்கள் பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.இவ்வாறு கூறினார்கள்.பேட்டியின்போது செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் உடன் இருந்தார்.