Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, February 28, 2013

பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக புதுச்சேரியில் இரண்டாயிர்த்திற்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டு கைது

0 comments

பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக புதுச்சேரியில் இரண்டாயிர்த்திற்கும்மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டு கைது.

                 மத்திய அரசின் விலைவாசி உயர்வு கண்டித்தும்,தொழிற்சங்க உரிமை
மறுப்பு,அனைவருக்கும் உத்தரவாதமான வேலைவழங்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.10ஆயிரம்,அரசு  காலிபணியிடங்களை நிரப்புதல்,பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்பதைகைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து  பிப்வரி 20,21 ஆகிய இரண்டு நாட்கள் அகில இந்தி பொது வேலை நிறுத்தத்திற்குமத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவலுக்கு இணங்க இந்த பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது.








கடைகள் அடைப்பு

இப்பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக புதுச்சேரி முழுவதும் கடைகள்
அடைக்கப்பட்டிருந்தது.ஆட்டோ,டெம்போ,பேருந்துகள் முற்றிலும்
ஒடவில்லை.புதுச்சேரி நகரத்தில் உள்ள அண்ணாசாலை,நேரு வீதி,காந்தி வீதியில்
உள்ள வர்த்தக நிறுவனங்கள்,பெரிய அங்காடிகள் மூடப்பட்டிருந்தது.இதேப்போல்
நகரை சுற்றியுள்ள முத்தியால்பேட்டை,முதலியார்பேட்டை,சின்னகடை,நெல்லித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளின் அங்காடிகள் மூடப்பட்டதால்  சாலைகளில் மக்கள் கூட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.மாநில அரசு ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் பெறும்பாளான அரசு துறை அலுவலகங்களில் ஊழியர் வரத்து குறைவாகவே காணப்பட்டது.

மறியல்

புதுச்சேரி காமராஜர் சிலை
புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற
சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,சிஐடியு மாவட்ட செயலாளர்
நிலவழகன்,நிர்வாகிகள்
ராஜாங்கம்,ராமச்சந்திரன்,சுமதி,குணசேகரன்,சிவக்குமார்,ராமசாமி உள்ளிட்ட
15 பெண்கள் உட்பட 140பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை
செய்யப்பட்டனர்.

இந்திராகாந்தி சதுக்கம்

எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள இந்திராகாந்தி சதுக்கத்தில் நடைபெற்ற
மறியல் போராட்டத்தில் சிஐடியு ஆட்டோ சங்க கவுரவத்தலைவர்
தா.முருகன்,பொதுச்செயலாளர் சீனூவாசன்,சிபிஐ தேசிக்குழு உறுப்பினர்
நாரா.கலைநாதன்,மாநில ஆட்டோ சங்க தலைவர் மணிவண்ணன்,எல்எல்எப் சங்க தலைவர்
ஜெயகுமார் மற்றும் பல்வேறு ஆட்டோ சங்கங்களின் தலைவர்கள் உட்பட 400 ஆட்டோ
ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
திருவாண்டார் கோவில்
திருவாண்டார் கோவிலில் நடைபெற்ற மறியல்போராட்டத்தில் சிஐடியு மாவட்ட
தலைவர் ஜி.ராமசாமி,மற்றும் பல்வேறு வெகுஜென இயக்க தலைவர்கள்
கலிவரதன்,ஆவனியப்பன்,உலகநாதன்,சங்கர் உட்பட 9பெண்கள் உட்பட 90பேர் கைது செய்யப்பட்டார்கள்.

பாகூர்

பாகூர் மாரியம்மன் கோவில் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் சிஐடியு
கட்டுமான சங்க தலைவர் கலியன் தலைமை தாங்கினார்.வெகுஜென இயக்க தலைவர்கள் ராமசாமி,பத்மநாபன்,தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 20 பெண்கள் உட்பட 110பேர் கைது செய்யப்பட்டனர்.இதேப்போல் கரிகலாம்பாக்கத்தில் நடைபெற்ற மறியல் போராட்த்தில் விவசாய சங்க தலைவர்  முருகையன்,நிர்வாகிகள்
இரத்தினவேல்,அரிதா°,முருகன்,சண்முகம் உள்ளிட்ட 40பேர் கைது
செய்யப்பட்டார்கள்.புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை,சுப்பையா சிலை உள்ளிட்ட
மாநிலம் முழுவதும் 12 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில்
2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவித்தனர்.


புதுச்சேரி,பிப்-21

விலைவாசி உயர்வை எதிர்த்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் புதுச்சேரியில் கைது.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதிப்பதை கைவிட
வேண்டும்.பெட்ரோல்,டீசல் விலைஉயர்வை உடனடியாக குறைக்க வேண்டும்.அரசு
காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.அனைவருக்கும் பாதுகாப்புள்ள
ஓய்வூதியம்,7வது ஊதியக்குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்த்தில்
அரசு ஊழியர் சம்மேளன கவுரவத்தலைவர் பாலமோகனன்,மற்றும் தலைவர்கள்
ஆனந்தராசன்,புகழேந்தி,இளங்கோவன்,கீதா,முருகவேல்,பிரமதாசன்,கிருஷ்டோபர்,ஆசிரியர்
சங்க தலைவர்கள் சண்முகம்,ஜெயராமன்,வத்சா,வாசுதேவன்,ரமேஷ்,ஜெயராஜ்
உள்ளிட்ட ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள்,அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட
120பெண்கள் உட்பட 380பேர்கள் கைது செய்யப்பட்டனர்.முன்னதாக சம்மேளன
அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக பேரூந்து நிலையம் அருகே வந்து மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com