Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, February 21, 2013

புதுச்சேரியில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற மத்திய பொதுத்துறை ஊழியர்கள்

0 comments



புதுச்சேரியில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற மத்திய பொதுத்துறை ஊழியர்கள் போராட்ட படங்கள்.



புதுச்சேரி,பிப்-20
அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தை யொட்டி புதுச்சேரியில் இன்று (வியாழனன்று)  பந்த் போராட்டம் நடைபெறுகிறது.
மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து சிஐடியு,ஏஐடியுசி,ஐஎன்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் நேற்றும் இன்றும் இரண்டு நாள் பொதுவேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.வங்கி,இன்சூரன்ஸ்,தொலைத்தொடர்பு,தபால்துறை,மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் இந்த வேலை நிறுத்த போராட்டம் புதனன்று வெற்றிகரமாக நடைபெற்றது.இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக புதுச்சேரியில் இடதுசாரிகட்சிகள்,தொழிற்சங்க அமைப்புகள் முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.இதனால் புதுச்சேரியில் ஆட்டோ,பேருந்து,டெம்போ,வர்த்தக நிறுவனங்கள் இயங்காது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆதரவு ஊர்வலம்
வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டு சிபிஎம்,சிபிஐ,மற்றும் அனைத்து மத்திய தொழிற்சங்க தலைவர்கள் புதனன்று மாலை புதுச்சேரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அண்ணாசாலை,நேருவீதி,பாரதிவீதி,காந்தி வீதியில் ஊர்வலமாக சென்று இன்று நடைபெறும் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பிரச்சரம் செய்தனர். 

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com