Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, February 28, 2013

சாமிப்பிள்ளை தோட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,பிப்-27

சாமிப்பிள்ளை தோட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


புதுசசேரி சாமிப்பிள்ளைத் தோட்டத்தில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.அணைக்கரை மேட்டில் வீடு கட்டும் மக்களுக்கு மூன்றாவது மாண்ய தொகையை உடனே வழங்க வேண்டும்.சுகாதார கேட்டை ஏற்படுத்தும் கழிவு நீர் வாய்க்காளை தூர்வாரி கோசு தொல்லையை கட்டுபடுத்த வேண்டும்.ஈ.சி.ஆர் சாலையில் இருந்து சாமிப்பிள்ளை தோட்டம் செல்லும் சாலையில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்க சிக்னல் வசதியை ஏற்படுத்த வேண்டும்.பொதுகழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
சாமிப்பிள்ளை தோட்டம் ,ஈசிஆர் சாலை சந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் உழவர்கரை நகரக்குழு உறுப்பினர் பாஸ்கர் தலைமை தாங்கினார். கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,உழவர்கரை நகரகமிட்டி செயலாளர் எஸ்.லெனின்துரை,புதுச்சேரி நகரக்கமிட்டி உறுப்பினர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.பிரதேசக்குழு உறுப்பினர் சத்தியா,கிளை செயலாளர்கள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com