Pages

ShareThis

Powered by Blogger.
 
Saturday, February 2, 2013

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.

0 comments
புதுச்சேரி,பிப்-2

 மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி   புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் செயற்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
மாக்சிஸ்ட் கட்சியின் பிரதேசக்குழு கூட்டம் அன்மையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாநிலத்தின் நிதிநிலமை குறித்தும்,விவசாய ம்,தொழில்,மீன்பிடி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.மத்திய அரசின் தவறான கொள்கைகலாளும்,மாநிலத்தின் முந்தைய காங்கிர° ஆட்சியும்,தற்போதைய என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின் தவறான கொள்கைகாளும் கிராமப்புரத்திலும்,நகர்புறத்திலும் ஏழ்மை அதிகரித்துள்ளது.
மத்திய அரசிடம் இருந்து வாங்கிய கடன்தொகை மட்டும் ரூ.4761கோடியாக உயர்ந்துள்ளது.இதற்கு மாநில அரசு ரூ.58கேடி வட்டியாக செலுத்தப்படுகிறது. யூனியன் பிரதேசம்  என்பதால் ஏற்கனவே அளித்துவந்த 70சதவீதம் மாண்ய தொகையில் இருந்து தற்போது 30சதவீதம் மாண்ய தொகை மட்டுமே வழங்கப்படுகிறது.இதனால் மாநிலத்தின் நிதிதேவை அதிகரித்துள்ளது.பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் இந்த அரசு செயல்படுத்தவில்லை.ஒரு பக்கம் கூட்டுறவு மற்றும் தன்னாட்சி பெற்ற நிறுவனங்களில் பணி  செய்து வரும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கபடவில்லை.புதியதாக தேர்வு செய்யப்பட்ட எல்.டி.சி,யூ.டி.சி,ஆசிரியர் பணியிடங்களில் இன்னும் ஆட்களை நியகிக்கப்படவில்லை. இது ஒருபக்கம் இருந்தாலும் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் போது அறிவிக்கப்பட்ட பாதாளசாக்கடை திட்டம்,குப்பை தூர்வார தனியாரிடம் ஒப்படைத்தில் மிகப்பெறும் ஊழல் நடைபெற்றுள்ளது.

இதனால்   மாநிலத்தின் நிதி சுமையை சரிகட்ட  வரிகள் மூலம் வசூலிக்க மாநில அரசு  மக்கள் தலையில் பெரும் சுமையை சுமத்தியுள்ளது.
ஏற்கனவே கோடிகணக்கில் மிக்பாக்கி வைத்துள்ளவர்களிடம் மின்கட்டணத்தை வசூலிக்காமல், தற்போது குடிசை வீடுகள் முதல் பெரும் தொழிற்சாலைகள் வரை இரண்டு மடங்காக மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
எனவே மத்திய அரசு நிதி வழங்குவதில் பாராபட்சமாக நடந்துகொள்வதை கண்டித்தும்,மாநிலத்தின் மொத்த கடன்தொகையை தள்ளுபடி செய்யவும்,சிறப்பு மாநில அந்தஸ்த்து உடனே வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை விலியுறுத்தி பிப்ரவரி 8ல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு பெருமாள் கூறினார்.பேட்டியின் போது செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நகரகமட்டி செயலாளர் பிரபுராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com