புதுச்சேரி,மார்ச்-2
அம்பேத்கர் கல்வி பயிற்சி மையம் நிறைவு விழா
அம்பேத்கர் கல்வி பயிற்சி மையம் நிறைவு விழா
புதுச்சேரியில் ஆரம்பிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை
வாய்ப்பு பயிற்சி மையத்தில் எல்ஐசி உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு
எழுதுவதற்க்கானக் இலவச பயிற்சிகள் கடந்த ஒருமாதமாக நடைபெற்று வந்தது.இதன்நிறைவு விழா புதுச்சேரி விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் சனிக்கிழமை (மார்ச்-2) நடைபெற்றது.இப்பயிற்சி மையத்தின் ஒருங்கினைப்பாளர் ஆர்.நடராஜன்,இணை ஒருங்கினைப்பாளர் ஆர்.எம்.ராம்ஜி,தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுவை தலைவர் தலித்சுப்பையா,பொருளாளர் என்.கொளஞ்சியப்பன்,ஆசிரியர் சங்க தலைவர்களுள் ஒருவர் ரமேஷ் ஆகியோர் நிறைவுவிழாவில் பங்கேற்றனர்.
மேலும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு தேர்வுகள் எழுதுவதற்கான எழுது பொருட்களும்,நினைவு புத்தகங்கiயும் வழங்கினார்.இப்பயிற்சி மையம் துவங்கிய ஒரு மாதத்தில் முதன் முதலில் பயிற்சி பெற்றவர்கள் தேர்வு எழுதுவது
குறிப்பிடத்தக்கது.
