Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, April 17, 2013

மேற்கு வங்கத்தில் மம்தா கட்சியின் அராஜகத்தை கண்டித்து இடதுசாரிகட்சிகள் சார்பில் புதுச்சேரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,ஏப்-16
மேற்கு வங்கத்தில் மம்தா கட்சியின் அராஜகத்தை கண்டித்து இடதுசாரிகட்சிகள் சார்பில் புதுச்சேரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆயிரம் இடதுசாரிகட்சிகளின் அலுவலகத்தை சூரையாடிய திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை கண்டித்தும், புகழ்பெற்ற பிரசிடென்சி பல்கலைகழக ஆய்வுகூடத்தை சூறையாடிய மம்தா கட்சியின் குண்டர்களை கைது செய்ய வேண்டும்.மாணவர் சங்க தலைவர் சுதித்தா குப்தா படுகொலை சம்பவம் குறித்து நீதி விசாணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இ;;ப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் தா.முருகன்,பார்வர்டு கட்சியின் புதுவை மாநில தலைவர் முத்து ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.சிபிஐ,சிபிஎம் தலைவர்கள்,ஊழீயர்கள் திரளாக இப்போரட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அராஜகத்தை கண்டித்து முழக்கமிட்டனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com