

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் ஏக்கர் விளைநிலம் வேளாண்மை அல்லாத வேறு பணிகளுக்கு மாற்றப்படு கிறது. இதனால் விவசாயிகள் மற்றும் விவ சாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பறிக் கப்படுகிறது; உணவு பற்றாக்குறை மாநில மாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் கூறினார்.
தொலைக்காட்சியில் 1ம் தேதி அவர் நிகழ்த்திய உரை வருமாறு:
கடந்த ஐந்தாண்டு காலமாக தமிழகத் தை ஆண்ட திமுக, மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகளை காற்றிலே பறக்க விட்டுள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு கடைப்பிடித்து வரும் தாராளமய கொள்கைகளை மாநிலத்திலும் திமுக அப்படியே செயல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, தமிழகத்தில், ‘உழவுக் கும்-தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற நிலை மாறி, ‘உழவையும்-தொழி லையும் ஒழித்துக்கட்டுவோம்’ என்று ஆட்சியாளர்கள் முனைப்புடன் செயல் பட்டு வருகின்றனர். வேறு எந்தக்காலத் திலும் இல்லாத வகையில் நாடு முழுவ தும் லட்சக்கணக்கான விவசாயிகள் தற் கொலை செய்து கொள்ளும் அவலம் வந்து விட்டது. இதற்கு தமிழகமும் விதிவிலக் கல்ல. இத்தகைய கொடூரமான நிலை மைக்குக் காரணம் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசின் கொள்கைகளே என் பதை வாக்காளர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.
50 லட்சம் ஏக்கர் வாக்குறுதி என்ன ஆனது?
கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது, அரசுக்குச் சொந்தமான 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை நிலமற்ற ஏழை களுக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் வழங்குவதாக உறுதியளித்தது திமுக. ஆனால், அரசு கணக்குப்படியே இதுவரை 2,11,356 ஏக்கர் மட்டுமே 1,76 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட் டுள்ளது. இதிலும் ஏராளமான முறைகேடு கள், மோசடிகள் நடந்துள்ளதாக தெரிகி றது. மீதி நிலங்கள் எங்கே போயிற்று? இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டம் இப்போது கலைஞருக்கே மறந்து போய்விட்டது என்பதை மறுக்க முடி யுமா? காவேரிராஜபுரம் போன்று எத்த னையோ இடங்களில் அரசியல் செல் வாக்குள்ளவர்கள், உயர்பதவியில் உள்ள வர்கள், கல்வி நிறுவன அதிபர்களால் லட் சக்கணக்கான ஏக்கர் அரசுக்குச் சொந்த மான நிலங்கள் வளைத்துப் போடப்பட் டுள்ளன. இத்தகைய நிலங்களை மீட்டு, நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, கட்டி இருக்கிற கோவணத்தை யும் களவாடுவதைப் போல, விவசாயி களுக்கு சொந்தமான நிலங்களை அவர்க ளுக்குத் தெரியாமலேயே மோசடியாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட, கொடுமை திமுக ஆட்சியில் நடந்தது. தாழ்த்தப் பட்ட மக்களுக்கென்று வெள்ளையர் ஆட் சிக்காலத்தில் வழங்கப்பட்ட பல லட்சம் ஏக்கர் பஞ்சமிநிலம் அம்மக்களிடமிருந்து பறிக்கப்பட்டதை மீட்பதற்கு முயற்சி மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் நில உச்சவரம்புச் சட்டம் இருந்தும் மிச்ச நிலம் எதுவும் எடுத்து விநியோகிக்கப்பட வில்லை. மாறாக, நிலக்குவியல் நடை பெற்று வருகிறது. நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக உச்சவரம்புச் சட்டத்தை திருத்தி நிலச்சீர்திருத்தத்தை சீரழித்தது திமுக அரசு. இப்படி நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் திமுக அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது என்று ஆணித்தரமாக குறிப்பிட விரும்புகிறோம். பஞ்சமி நிலத்தை மீட்கவும், நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் கிடைக்கவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத் தில் உறுதியான குரல் கொடுக்கும்.
நிறைவேறாத கனவாக
கருகி விடுமோ?
காணி நிலமும்-கனவு இல்லமும் வாழ்நாளில் நிறைவேறாத கனவாகவே கருகிவிடுமோ? என்ற அச்சத்தில் லட்சக் கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக் கின்றனர் . தமிழகத்தில் சுமார் 25 லட்சம் குடும்பங்கள் சொந்த வீட்டு மனை இல்லா மல் பல்வேறு வகையான புறம்போக்கு களிலும், வாடகை குடியிருப்புகளிலும் வாழ்ந்து வருகின்றனர். மனிதர்களின் அடிப்படை தேவையான ‘வசிப்பிடம்’ என்ற அதிமுக்கிய பிரச்சனையைத் தீர்ப்ப தற்கு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? மாறாக, சென்னை நகரை அழகு படுத்து கிறோம் என்ற பெயரிலும், நீர்நிலை ஆக் கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரிலும் ஏழை-எளிய மக்களை தங்கள் குடியிருப்புகளிலிருந்து கட்டாயமாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையில்தான் வேகம் காட்டியது திமுக அரசு. அரசின் இந்த அராஜகத்தை எதிர்த்துப் போராடி மக்களின் வாழ்வுரிமையை பாதுகாத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.
வறுமையில் உள்ள கிராமப்புற மக்க ளுக்கு குறைந்தபட்ச வேலை வாய்ப்பை உருவாக்கித்தரும் வகையில் கொண்டு வரப்பட்டது தான் 100 நாள் வேலை உத்தர வாதச் சட்டம். 2004-ஆம் ஆண்டு இடது சாரிகளின் ஆதரவுடன் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்பட்ட போது, கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்ப்பந் தத்தால் கொண்டு வரப்பட்டதே இத்திட் டம். கிராமப்புற ஏழை விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஓரளவு நிவாரணம் அளிக்கக்கூடிய இத்திட்டத் தை திமுக அரசு சீர்குலைத்து வருகிறது. கூலியை குறைப்பது, மோசடியாக பணத் தை கையாடல் செய்வது, 100 நாள் வேலை தர மறுப்பது என பல சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டது. சட்டக் கூலியை கேட்டதற்காக விழுப்புரம் மாவட்டம் ரெட்டணையில் விவசாயத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலரை கொடுமையான காயங்க ளுக்கு உட்படுத்தியது திமுக அரசு.
ஆதிவாசி மக்களை வஞ்சித்த அரசு
ஆதிவாசி மக்களின் நில உரிமையை யும், வன உரிமையையும் பாதுகாக்கும் விதத்தில் இடதுசாரிகளின் இடைவிடாத வற்புறுத்தலால் கொண்டு வரப்பட்டது வன உரிமைச்சட்டம் 2006. இச்சட்டத் தை தமிழ்நாட்டில் அமல்படுத்தாமல் ஆதிவாசி மக்களுக்கு பெரும் பாதிப்பை இழைத்துள்ளது திமுக அரசு. மேலும், மலைப்பகுதிகளில் மட்டும் பட்டா வழங்க தடை விதித்து உத்தரவு போட்ட ஒரே அரசாங்கம் திமுக என்பதை ஆதிவாசி மக்கள் ஒருநாளும் மறக்கக் கூடாது.
விவசாயிகளும் - விவசாயமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் பிழைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது என்றால் மிகையல்ல. உரம், விதை, பூச்சி மருந்து போன்ற வேளாண் இடுபொருட்களின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து கொண்டே உள்ளது. கடந்தாண்டு உரத்திற்கான மானியம் வெட்டப்பட்டு உரத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. இது காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு விவசாயிகளுக்கு இழைத்த மிகப்பெரிய துரோகம் ஆகும்.
மின்வெட்டால் அழிந்த பயிர்
மின்வெட்டு காரணமாக விவசாயப் பயிர்கள் அழிந்து கொண்டுள்ளன. எப் போது மின்சாரம் வருமென விவசாயிகள் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. விவசா யத்திற்குத் தேவையான மின்சாரத்தை வழங்க அரசு எந்த முயற்சியும் எடுக்க வில்லை. விவசாயிகள் மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளுக்கு மேலாக காத் திருக்கிறார்கள். மின்இணைப்பு வழங்கு வதாக முதல்வர் சொன்னது ஏமாற்று நாடகமாகவே முடிந்து விட்டது.
விவசாயிகளுக்கு ஒரே ஒருமுறை மட்டும் கடனைத் தள்ளுபடி செய்த திமுக அரசு முதலாளிகளுக்கு ஏராளமான சலுகைகளை ஆண்டுதோறும் அளித்து வருகிறது. பொதுத்துறை மற்றும் கூட்டு றவு வங்கிகள் ஏழை, சிறு விவசாயிக ளுக்கு கடன் வழங்க மறுத்து வருகிறது. இதனால், கந்து வட்டிக்கு கடனை வாங்கி மீள முடியாத கடன் வலையில் விவசாயி கள் சிக்கித் தவிக்கின்றனர்.
விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை வேண்டுமெனக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராடிய விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசக் கூட மறுத்தது திமுக அரசு என்பதை விவசாயி கள் மறந்து விடக்கூடாது.
அச்சுறுத்தும் உணவுப்பஞ்சம்
இந்தச் சூழ்நிலையில், விவசாயம் செய்து சாவதைவிட, நிலத்தைவிற்று பிழைத்துக் கொள்வது நல்லது என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ள னர். தமிழ்நாட்டில், ஆண்டுதோறும் 1.5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் வேளாண் மை அல்லாத வேறு பணிகளுக்கு மாற்றப்படுகிறது. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதார மான நிலம் அவர்களிடமிருந்து பறி போய்க் கொண்டுள்ளது. சிறப்புப் பொரு ளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வளர்ச்சித் திட்டங் கள், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நஞ்சை நிலங்கள் கான்கிரீட் காடுகளாக மாற்றப்படுகின்றன. லட்சக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ள தமிழகத்தில் நல்ல விளை நிலங்களை நாசமாக்கலாமா?
இதன் விளைவாக, உணவு உற்பத்தி குறைந்து, உணவு தானிய பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டிருக் கிறது. உணவுத்தட்டுப்பாடு நம்மை அச் சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு திமுக அரசின் அணுகுமுறைகளே கார ணம். “வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்” என் றான் மகாகவி பாரதி. பாரதியின் கனவு நன வாக வேண்டுமென்றால், உணவு உற்பத் தியை பெருக்குவதும், அதை வாங்கிப் பயன்படுத்தும் அளவுக்கு மக்களின் வாங் கும் சக்தியை அதிகப்படுத்தவும் வேண் டும். மத்திய-மாநில ஆட்சியாளர்களுக்கு இத்தகைய தொலைநோக்குப் பார்வை யில்லை. நாட்டின் உணவுக் கிடங்குக ளில் 178 லட்சம் டன் உணவு தானியம் கெட்டுப்போனது நாடறியும். உச்சநீதிமன் றம் தலையிட்டு, வீணாகப் போகும் உணவு தானியத்தை ஏழைகளுக்கு இலவசமாக விநியோகம் செய்ய வேண்டுமென்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கோ, இதுபோன்ற கொள்கை விஷயங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று கூறியதைக் கேட்டு ஏழைகள் வயிறு எரிந்ததை மறக் கக்கூடாது. 50 சதவீதம் மக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில், தானியங்கள் வீணாகி மண்ணோடு மக்கி னாலும் பரவாயில்லை- அதை ஏழைக ளுக்கு விநியோகிக்கக் முடியாது என்ற அளவுக்கு கொடூர மனம் படைத்த காங்கிர சுக்கு வாக்களிக்க முடியுமா? என்பதை வாக்காளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.