புதுச்சேரி ஏப் 29
மோட்டார் இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி சிஜடியூ உள்ளிட்ட அனைத்து ஆட்டோ சங்கங்களின் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறிவிப்பின்றி ஆட்டோ ஒன்றுக்கு வசூல் செய்த வாகண காப்பீட்டுத்தொகை ரூ.1633 லிருந்து ரூ.2633 என்ற அளவில் ரூ.1000 உயர்த்தியதை மத்திய அரசு திரும்பபெறவேண்டும்.பெட்ரோல்,ஆயில் விலை உயர்வை உடனே திரும்பபெறவேண்டும்.விதிமுறைகளை மீறி இயங்கும் இரண்டு சக்கர மோட்டார் வாடகை நிலையங்களை தடை செய்ய வேண்டும்.விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற்போல் மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுருத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
காமராஜர் சிலை எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு சிஜடியூ ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் சீனுவான் தலைமை தாங்கினார்.சங்கத்தின் கவுர தலைவர் தா.முருகன்,சிஜடியூ மாவட்ட செயலாளர் கே.முருகன்,தலைவர் ராஜாங்கம்,மணிவண்ணன்-(புமாஆஓச),சிவக்குமார்-(ஜஎன்டியூசி),பிராங்கிளின்-(எல்பிஎப்),ஏழுமலை-ஏடியூ,சந்திரசேகர்-ஏஜடியூசி,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் அனைத்து சங்கங்களை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள்,நிர்வாகிகள் திரளாக பங்கேற்று முழக்கமிட்டனர்.