Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, April 22, 2011

ஆளநரின் அதிகாரத்தை தவறாக பயன் படுத்தி தனது குடும்பத்தினர் அங்கம் வகிக்கும் சவுத் எஜிக்கேஷ்னல் டிரஸ்ட் பெயரில் காரைக்காலில் மருத்துவக்கல்லுhரி

0 comments

புதுச்சேரி ஏப் 21
காரைக்காலில் மருத்துவக்கல்லுhரி துவங்க தடையில்லா சான்றிதழ் வழங்கியது குறித்து புதுச்சேரி முதல்வர் பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் வி.பெருமாள் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
வரி மோசடி மன்னன் ஹசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் வழங்க ஆவணம் செய்திருந்த குற்றச்சாட்டில் ஆளாகியுள்ள புதுச்சேரி துனை நிலை ஆளுநர் இக்பால் சிங்கை அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில்
இக்பால் சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன் படுத்தி தனது குடும்பத்தினர் அங்கம் வகிக்கும் சவுத் எஜிக்கேஷ்னல் டிரஸ்ட் பெயரில் காரைக்காலில் மருத்துவக்கல்லுhரி துவங்க அனுமதி பெற்றுள்ளார்.புதுச்சேரி அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் இம்மருத்துவக்கல்லுhரிக்கு சுகாதாரத்துறையின் கீழ்நிலை செயலாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி அமைச்சரவைக்கு தெரியாமல் தலைமை செயலாளர் எப்படி அனுமதி வழங்கினார். ஆளநரின் உத்தரவின் பேரிலேயே வழங்கப்பட்டதா ?எனவே மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுப்பட்டோர் மீது புதுச்சேரி அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும்.மேலும் இப்பிரச்சனை தொடர்பாக முதல்வர் மாநில மக்களுக்கு விலக்கமளிக்க வேண்டும் இல்லை என்றால் முதல்வர் வைத்தியலிங்கம் ராஜினமா செய்ய வேண்டும் .
மேலும் ஆளுநர் இக்பால்சிங் கை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறுவதுடன் மருத்துவக்கல்லுhரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சிபிஜ விசாரணைக்கு உத்திரவிடவேண்டும்.அதோடு ஆளுநர் இக்பால் சிங் பதவி எற்றதிலிருந்து கோப்புகளில் கையெழுத்திட்டு அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் உத்தரவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.அவரது முழு சேமிப்பு கணக்குகளை ஆய்வு செய்ய வெண்டும்.
மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை (ஏப்-22) காலை ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு கூறினார்கள்.முன்னதாக மருத்துவக்கல்லுhரி துவங்க அரசால் வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழை பத்திரிக்கையாளர்களிடம் கான்பித்தனர்.பேட்டியின் போது செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்.நிலவழகன்,ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
படம் உள்ளது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com