புதுச்சேரி ஏப் 25
இலாஸ்பேட்டை தொகுதியில் அடிப்படை பிரச்சனைகளுக்காக மார்ச்சிஸ்ட் கட்சி தொடர்ந்துபோராடும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி இலாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட சி.எச்.பாலமோகனனுக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சார ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்-24) நடைபெற்றது.பெத்துசெட்டிபேட்டையிலிருந்து துவங்கிய பிரச்சாரத்திற்கு சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார்.வேட்பாளர் பாலமோகனன் திறந்த வாகனத்தில் நின்றவாரு வாக்களித்த மக்களுக்கு வீதி வீதியாக நன்றி கூறினார்.
மேலும் பாலமோகனன் பேசுகையில் இத்தொகுதியில் போட்டியிட்டவர்கள் ஒரு வாக்களாருக்கு ரூ.1000முதல் ரூ 3000 ஆயிரமும் கிப்ட் டோக்கன் என லஞ்சமாக கொடுத்துள்ளனர்.இதற்கு மத்தியில் மார்க்சி°ட் கட்சி பனபலத்தை எதிர்த்தும் ஊழலற்ற நேர்மையான அரசியலுக்காக போட்டியிட்டது.தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் மார்ச்சிஸ்ட் கட்சி மக்களின் அடிப்படை பிரச்சனைக்கு தொடர்ந்து இத்தொகுதியில் குரல் கொடுக்கும் என்றார்.இப்பிரச்சாரத்தில் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,இடைகமிட்டி செயலாளர்கள் சீனுவாசன்,லெனின்துரை,பிரதேசக்குழு உறுப்பினர்கள்,கிளை செயலாளர்கள் உள்ளிட்ட திரளனோர் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.முன்னதாக அசோக்நகர்,சாந்திநகர்,குறிஞ்சிநகர் உள்ளிட்ட பகுதிகளில் இப்பிரச்சாரம் நடைபெற்றது.