புதுச்சேரி ஏப் 4
பணபளத்தால் ஜனநாயகத்தை விலை பேசிவிடலாம் என்ற காங்கிரஸ்-திமுக வின் எண்ணத்தை மக்கள் முறியடிப்பார்கள் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுதாசுந்தரராமன் கூறினார்.
மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை சட்டபேரவை தேர்தல் அறிக்கையை கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட மத்தியக்குழு உறுப்பினர் சுதாசுந்தரராமன் பெற்று கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இலவசங்களை கொடுப்போம் என அறிவிப்பு செய்து வரும் கட்சிகளுக்கு மத்தியில் மார்ச்சிஸ்ட் கட்சி மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவோம் என உறுதியோடு தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம். இலவசங்கள் வழங்குவதன் மூலம் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறையாது எனவே தான் கொள்கை ரீதியாக மார்ச்சி°ட் கட்சி எதிர்க்கிறது.
புதுச்சேரி ஆட்சியாளர்களின் கொள்கையால் விவசாயம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.எனவே தான் மார்ச்சிஸ்ட் கட்சி விவசாயத்திர்க்கும் ,தொழில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
திமுக-காங்கிரஸ் கட்சிகள் பணபளத்தின் மூலம் ஜனநாயகத்தை விலை பேசிவிடலாம் என்ற கனவு மக்கள் சக்தி மூலம் நிராகரிக்கபடும் என்றார்.மேலும் தமிழகத்தில் பணம்,பொருட்கள் கைப்பற்றி வருவது போல் ஏன் புதுச்சேரியில்அத்தகைய சோதனைகள் நடைபெறுவதில்லை என்று சுதாசுந்தரராமன் கேள்வி எழுப்பினார்.
பேட்டியின் போது மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர்கள் சாந்தி,கலிவரதன்,ராமச்சந்திரன்,உலகநாதன் ,உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
படம் உள்ளது