Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, April 7, 2011

புதுச்சேரி மாநில வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்

0 comments
புதுச்சேரி மாநிலத்தில் 13 வது சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்பரல் 13, 2011 ல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் புதுச்சேரி மாநில மக்களின் கடமைகள் குறித்தும், மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு குறித்தும் இத்தேர்தல் அறிக்கையை மாநில மக்களுக்கு முன்வைக்கின்றோம். காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகள் - தேர்தல்கால வாக்குறுதிகளின் செயலாக்கம் - மக்கள் பிரச்சனைகளில் ஆட்சியாளர்களின் தலையீடுகள் எவ்வாறு இருந்துள்ளது என்பதையும் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணமாகும்.

மத்தியிலும் காங்கிரஸ், மாநிலத்திலும் காங்கிரஸ் என்ற முழக்கத்தோடு அதிகாரத்தைப்பிடித்த காங்கிரஸ் கட்சி மாநிலத்தை முன்னேற்றவில்லை. அனைத்து துறைகளிலும் மிகப்பெரும் தோல்வியை சந்தித்து வருகிறது. மத்திய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத கொள்கையை அப்படியே புதுச்சேரி மாநிலத்தில் தி.மு.க துணையோடு காங்கிரஸ் செயல்படுத்தி வருகிறது. இதனால் புதிய தொழில்கள் இல்லை. இருக்கும் தொழில்கள் படிப்படியாக மூடப்படுகிறது. விவசாயம் சீரழிந்து வருகிறது. நகர் மற்றும் கிராமப்புற வறுமையும் , வேலையின்மையும் பெருகிவருவது, மறுபுறத்தில் விலைவாசி உயர்வு வருமானத்தின் பெரும்பகுதியை பறித்துவருகிறது. எழை, எளிய நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர்.

சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகள்;
பட்ஜெட் உரையின் அறிவிப்புகள், சட்டப்பேரவை அறிவிப்புகள் பல நடைமுறைக்கு வரவேயில்லை. மக்கள் நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன. மக்களுக்கான திட்டம் என்பதற்கு மாறாக கமி­னுக்காகத் தான் திட்டங்கள் என்றாகிவிட்டது. மேலும் மக்கள் வரிப்பணத்தில் இருந்து சொந்த வீட்டிற்கு மாதம் ஒன்றுக்கு பல ஆயிரங்கள் வாடகைப்பெறும் அமைச்சர்கள் சில அமைச்சர்களின் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு அரசு செலவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயணச் செலவு ..... என வகைத்தொகையில்லாமல் செலவழிக்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், துப்புரவு ..... என பலத்துறைகள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறது. ஊழலும் , முறைகேடுகளும் தலைவிரித்தாடுகிறது. போராடும் ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான அடக்குமுறைகளும் , 144 தடை உத்தரவுகளும் சகஜமாகிவிட்டது. ஒரு ஆட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான முன்னுதாரணத்தை காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆட்சியில் உள்ள காங்கிரஸ் - திமுக தலைமையிலான 2 வது ஐ.மு. கூட்டணி அரசு ஏறிவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது. வேலையின்மை, வறுமை, விவசாயம், மற்றும் தொழில் நெருக்கடிக்கு தீர்வு காணவில்லை. தனியார் மய , தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருவதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்க்கை நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். பொதுத்துறை பங்குகள் விற்பனை, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, தனியார் வங்கிகள் துவங்க தாராள அனுமதி, புதிய பென்­ன் திட்டம் அமுலாக்கம் ஆகியவற்றை முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக புதிய மெகா மகா ஊழல்களால் நாட்டின் செல்வம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் ஆட்சியாளர்களின் செயல்பாடும், ஊழல் பேர்வழிகளுக்கு அதிகாரப் பொறுப்பு வழங்கி அழகுபார்த்ததும் அம்பலத்துக்கு வந்துள்ளது. இத்தகைய தவறான கொள்கை மற்றும் ஊழல்களால் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு மக்கள் மத்தியில் தனிமைப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சரிவை சமாளிக்க நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்லில் எதைச்செய்தேனும் ஆட்சியை பிடிக்க முயலுகிறார்கள்.


இத்தகைய மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுகட்டுவது புதுச்சேரி மாநில மக்களின் மிக முக்கிய ஜனநாய கடமை என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. இந்த நோக்கத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் களத்தில் புதுச்சேரி மக்களை சந்திக்கிறது.
புதுச்சேரி மாநிலம் முன்னேற மக்களின் நலன் காத்திட மார்க்சிஸ்ட் கட்சி கீழ் கண்ட கோரிக்கைகளுக்காக பாடுபடும்
மத்திய , மாநில அரசுகள் பின்பற்றிவரும் ஏழ்மையை அதிகப்படுத்தும் தாராளமய , தனியார் மய கொள்கையை முறியடித்து மக்கள் நலன் சார்ந்த மாற்றுக்கொள்கைக்காக மார்க்சிஸ்ட் கட்சி போராடும்.

தொழில் வளர்ச்சி

காங்கிரஸ் தி.மு.க மத்திய கூட்டணி ஆட்சியின் நவீன தாராளமயக் கொள்கையை புதுச்சேரி காங்கிரஸ் அரசு அப்படியே பின்பற்றி வருகிறது. இதனால் குறு, சிறு நடுத்தரத் தொழில்களும் , பாரம்பரிய நெசவுத் தொழிலும் கடுமையான பாதிப்புகளுக்கு இலக்காகி உள்ளன. தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையான கச்சாப்பொருளோ , விற்பனை சந்தையோ புதுச்சேரி பெற்றிருக்கவில்லை. அனாலும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வகைப்போக்குவரத்து வசதி, தட்டுபாடில்லாத மின்சாரம் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி தொழில் வளர்ச்சிக்கு திட்டமிடவில்லை.

புதுச்சேரியின் புராதன தொழில்களான ரோடியர், சதேசி , பாரதி பஞ்சாலைகளை நவீனப்படுத்தி புதிய வேலைவாய்ப்புகள் பெருகிட மத்திய அரசிடம் இருந்து நதி உதவி பெற்றுத் தரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி அறவிப்பாகவே உள்ளது. மத்திய ஜவுளி மேம்பாட்டு கழகம் 2010 -2011 க்கு ஒதுக்கிய 3000 கோடியை பல்வேறு மாநிலங்களில் ஜவுளித் தொழில் மேம்பாட்டுக்கு நிதி வழங்கியுள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் புதுச்சேரிக்கு நிதி பெறவில்லை. மறுபுறத்தில் பஞ்சாலைத் தொழிலில் சில பிரிவுகள் மூடப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் புதிய தொழில் வரவுகளை விட மூடியத் தொழிற்சாலைகள் தான் ஏராளம். பாரம்பரிய நெசவுத் தொழில் காங்கிரஸ் ஆட்சியில் அழிக்கப்பட்டு விட்டது. மத்திய அரசு அளித்துவந்த மானியமும் நிறுத்தப்பட்டுவிட்டது.இலவச துணித்திட்டத்திற்கு நெசவுத் துணிகளை கொள்முதல் செய்வதையும் நிறுத்திவிட்டது.மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள காங்கிரஸ் - தி.மு.க ஆட்சிகள் தொழில் வளர்ச்சியை முடக்கிப்போட்டுள்ளன. இதனால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் , வேலைவாய்ப்புகளும் கடுமையாக பாதித்துள்ளன.

மாநிலத்தின் முதலீடு வருவாயை அதிகரிக்க கேரள இடது முன்னணி அரசைப்போல மாநில பொதுத்துறை தன்னாட்சி மற்றும் கூட்டுறவு தொழில் நிறுவனங்களை இலாபகரமாக இயக்கிட கட்சி உறுதியாகப் போராடும். மேலும் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கட்சிக் குரல்கொடுக்கும்.
காங்கிரஸ் ஆட்சியில் அழிவின் விளிம்பில் உள்ள பஞ்சாலைத் தொழில்களைப்பாடுகாத்திட , மத்திய ஜவுளி மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து நிதி உதவிப் பெற்று பஞ்சாலை தொழிலை புரணமைத்திட மார்க்சிஸ்ட் கட்சி போராடும், ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் துவங்கி ஏராளமான ஆண்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மார்க்சிஸ்ட் கட்சி குரல் கொடுக்கும்.

மாநிலத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திடவும் புதிய தொழில்கள் துவங்கவும் கட்சி போராடும் .பாரம்பரியத் தொழிலாள நெசவு, ஜவுளி மற்றும் மரபு சார்ந்த கைத்தொழில், கைவினைத் தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்த கட்சி குரல்கொடுக்கும்.
பசுமை புதுச்சேரியும் விளை நிலங்கள் பாதுகாப்பும்

புதுச்சேரி மாநிலத்தில் மொத்த விவசாயம் சார்ந்த நிலம் 48,651 யஹக்டேராகும். கடந்த 15 ஆண்டுகளில் 20 ஆயிரம் யஹக்டேர் விவசாய நிலம் விவசாயம் சாராதவற்றிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. மத்திய , மாநில ஆட்சியாளர்களின் தவறான விவசாயக் கொள்கையால் தேசிய சராசரியை விட பல மடங்கு கூடுதலாக விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாறி வருகிறது. நிலமற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் கிராமப்புற வறுமையும், உணவு நெருக்கடியும் ஏற்படுவதோடு, நகரத்தை நோக்கி இடம்பெயர்வதால் நகர்புற நெருக்கடியும் தீவிரமாகும். இந்த நிலை நீடித்தால் சமூகப்பதட்டமும், குற்றப்பெருக்கமும் அதிகரித்து அமைதியற்ற மாநிலமாக மாறிவிடும் ஆபத்துள்ளது. ஆகவே. தற்போதுள்ள விளைநிலங்களை பாதுகாத்திட நிலவங்கி துவக்கவும், நிலமற்ற ஏழைகள் விவசாயம் செய்ய , நிலங்கள் வழங்கவும் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாகப் போராடும். நிலம் விற்க முன்வருகிற விவசாயிகளிடம் இருந்து வெளிச்சந்தை விலைக்கு கொள்முதல் செய்யவும் , நில உச்சவரம்பை மறு சீரமைக்கவும் கட்சி பாடுபடும். இதன் மூலம் விவசாய வளர்ச்சி , கிராமப்புற, நகர்புற வளர்ச்சி- ஆகியவற்றை உள்ளடக்கிய பசுமை புதுச்சேரியை உருவாக்க கட்சி போராடும்.

தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதச் சட்டப்படி கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் நகர்புற ஏழைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பதை 150 நாட்களாக உயர்த்தவும் , முழுமையான வேலை அளிப்பதை உறுதிப்படுத்தவும் , நாள் கூலி ரூ 150 ஆக உயர்த்தவும் கட்சி போராடும்.

வேளாண்தொழில் முன்னேற்றத்திற்காக துவங்கப்பட்ட பாசிக் மற்றும் பாப்ஸ்கோ நிறுவனங்கள் மது, ஜவுளி மற்றும் பெட்ரோலிய தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன.இதை மாற்றி தேவைக்கேற்பஉரத்தை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கவும் . விதை மற்றும் நவீன விவசாய தொழில் நட்பம் , நுண்ணுரிய விவசாயம் ஆகியவற்றிற்கு உதவிட மார்க்சிஸ்ட் கட்சி போராடும்.

கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ 3000 வழங்கவும் , குவிண்டால் நெல்லுக்கு ரூ 1500 வழங்கவும் , விவசாய விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவும் மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்.ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாய விளைப்பொருள்களை திட்டமிட்ட கூட்டு செயல்பாடு மூலம் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்யும் மோசடியை தடுத்திட கட்சி உறுதியாகப் போராடும்.

விவசாயம் நட்டத் தொழிலாக மாறியதால் நிலவானிபம் மாநிலத்தில் கோலோச்சுகிறது. விளைநிலங்கள் குறைந்து கிராமப்புற வறுமையும் , குடிபெயர்தலும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. விவசாயத்தை இலாபகர தொழிலாக மாற்றிட பொறுத்தமான விவசாய கொள்கையை உருவாக்க கட்சி பாடுபடும்.
அனைவருக்கும்வீட்டுமனைப்பட்டா

மாநிலத்தில் வீடில்லாத அனைத்து ஏழை ,எளிய மக்களுக்கும் இலவச வீட்டுமனை வழங்கவும், குடியிருக்கிற வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கவும் கட்சி பாடுபடும். காமராஜர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய உதவித்தொகையை ரூ 2 லட்சமாக உயர்த்தவும், அரசியல் பாகுபாடில்லாமல் தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கவும் கட்சி போராடும்.
வலுவான பொதுவினியோகத்திட்டம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மாநில காங்கிரஸ் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. மானிய விலையில் வழங்கப்பட்ட 6 மளிçக் பொருள்கள் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. கேரளத்தைப்போல சமையல் எண்ணெய், பருப்பு, பூண்டு ..... உள்ளிட்ட 14 பொருள்கள் அனைத்து ரே­ன் கடைகளிலும் வழங்க கட்சி போராடும். அனைவருக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த கட்சி பாடுபடும்.
இளைஞர் நலம்
வேலையின்மை சமூகப்பதட்டத்தையும் - குற்றப் பெருக்கத்தையும் உருவாக்கி வருகிறது. மாநிலத்தின் மேம்பட்ட மனிதவளத்தை மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும் கட்சி பாடுபடும்.

இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ப இளைஞர் நல கொள்கையை உருவாக்கிட கட்சி பாடுபடும்.

புதுச்சேரி மகப்பேறு மருத்துவமனை,அரசு மருத்துவக்கல்லூரி, இந்திராகாந்தி அறவியல் கலைக்கல்லூரி, உள்ளாட்சித்துறை ..... போன்ற பல்வேறு துறைகளில் தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு பணி வழங்குவதை ரத்து செய்ய மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாகப் போராடும். மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கவும், சமூக நீதியை உறுதிப்படுத்தவும் கட்சி பாடுபடும்.

அனைத்து அரசுத் துறைகளிலும் ஒப்பந்த முறையில் ஊழியர்கள் நியமிப்பதை தடுத்திட , ஓய்வுப் பெற்றவர்களை மீண்டும் பணிநீட்டிப்பு செய்வதை தடுத்திட கட்சி போராடும். மேலும் புதிய பென்­ன் திட்டத்தை ரத்து செய்து, அரசு ஊழியர்களின் நீண்டகால பாதுகாப்புடன் கூடிய பழைய பென்­ன் திட்டத்தை செயல்படுத்திட ஊதிய முரண்பாடுகளை களைந்திட, உறுதிசெய்யப்பட பதவி உயர்வு வழங்கிட மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாகப் போராடும்.
கல்வி வளர்ச்சி

அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை 1:40 ஆக உறுதிப்படுத்தவும், ஆசிரியர் பணிநியமனத்தை வேலைவாய்ப்பகம் மூலம் நிரப்பிட, ஒப்பந்த ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்திட கட்சி போராடும். மேலும் வகுப்பறை ஜனநாயகம், விஞ்ஞான கல்வி, செய்முறை கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிக்கல்வியை மேம்படுத்த கட்சி பாடுபடும். கல்வி உதவித் தொகையை கல்வியாண்டின் துவக்கத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமூக கட்டுப்பாட்டை ஏற்படுத்த , கல்விக் கட்டணம் மற்றும் ஆசிரியர் பணிநிலையை முறைப்படுத்திட சட்டம் இயற்ற கட்சி உறுதியாகப் போராடும்.

தனியார் மருத்துவம் உள்ளிட்ட தொழில் கல்லூரிகளில் 50 சதவீத அரசு இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவும் , கல்விக்கட்டணத்தை முறைப்படுத்தவும் கட்சி போராடும் . மேலும் காமராஜர் கல்வி உதவித் தொகையை நிலுவையில்லாமல் காலத்துடன் வழங்கவும் கட்சி குரல் கொடுக்கும்.

தொழிலாளர் நலம்

அனைத்து தொழில்களிலும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுபேர உரிமையை உறுதிப்படுத்தவும், குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்து வழங்கவும் - கண்காணிக்கவும் கட்சி போராடும். மேலும் சட்டவிரோத ஒப்பந்த தொழிலாளர் முறை, கொத்தடிமை தொழிலாளர் முறையை அகற்றிட கட்சி குரல்கொடுக்கும்.

மாநிலத்தின் மொத்த உழைப்பு சக்தியில் பெரும்பகுதியினராக உள்ள அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு பென்­ன் ,வைப்பு நிதி, மருத்துவ கப்பீடு உள்ளிட்ட சமூகப்பாதுகாப்பு உறுதிப்படுத்திட கட்சி பாடுபடும். முறைசாரா தொழிலாளர் சமூகப்பாதுகாப்பு சட்டத்தின் (2008) ன் படி அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றிட, சமூகப்பாதுகாப்பு திட்டத்திற்கு வெளியில் உள்ள வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட இதர அமைப்புசாரா தொழிலாளர் பிரிவினரையும் இணைத்திட கட்சி போராடும்.

கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தை செயல்படுத்தவும், அதில் நடைபெறும் முறைகேடுகளை களைந்திடவும், கட்டிடத்தொழிலாளர்களை நலவாரியத்தில் உறுப்பினராக சேர்த்திடவும் மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும். மேலும் நலவாரியத்திற்கான நலவரியை உறுதியாக வசூலித்திடவும், நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.மீனவ மக்கள் நலன்

மீனவ மக்களை வாழிடத்தில் இருந்து அகற்ற முயற்சிக்கும் மத்திய அரசின் முயற்சியை தடுத்திடவும், இலங்கை கடற்படையினால் தொடரும் தாக்குதல் மற்றும் படுகொலைகளை தடுத்திடவும் மத்திய மாநில அரசுகளை கட்சி வலியுறுத்தும்.

இலங்கையில் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவும், இலங்கை இராணுவத்தின் முள்வேலி முகாம்களில் அடைப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களின் பூர்வீக இடத்தில் மறு குடியமர்த்தவும், சுயாட்சி உரிமை வழங்கவும் மத்திய அரசு தலையீடு செய்ய கட்சி நிர்பந்திக்கும்.

பெண்கள் நலன்

பெண்களுக்கு நாடாளுமன்றம் , சட்டமன்றங்களில் 3 ல் 1 பங்கு இடஒதுக்கீடு கிடைக்கவும், உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கவும் கட்சி போராடும். பெண்களின் முன்னேற்றத்திற்கான சிறப்பு திட்டங்களை உருவாக்கி அமுல்படுத்தவும் , பெண்கள் மீதான கொடுமைகளுக்கு முடிவுகட்டவும் கட்சி தொடர்ந்து போராடும். பெண்கள் மீதான குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்தவும், வரதட்சனை கொடுமையில் இருந்து பெண்களை விடுவிக்கவும் கட்சி பாடுபடும்.

மாநில பெண்கள் ஆணையத்தில் பெண் உரிமைக்காக போராடும் அமைப்புகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கி அதன் செயல்பாட்டை முறைப்படுத்திட , கூடுதல் அதிகாரங்கள் வழங்கிட கட்சி போராடும்.
சமூகநீதி - தீண்டாமை ஒழீப்பு

இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களின் நலன் காத்திட, நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமி­னின் பரிந்துரைப்படி கல்வி , வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க கட்சி பாடுபடும். இஸ்லாமியர்களின் சமூக மேம்பாட்டிற்கு தனி நிதி ஒதக்கீடு செய்து சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த கட்சி வலியுறுத்தும்.

தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்டவும், தீண்டாமையின் அனைத்து வடிவங்களையும் அகற்றிட கட்சி போராடும். கல்வி வேலை வாய்ப்புகளில் தலித் இடஒதுக்கீடு முழுமையாக அமுலாகவும் , அனைத்து பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பவும் கட்சி குரல் கொடுக்கும். தலித் மக்கள் சமூகமேம்பாட்டுத் திட்டமான சிறப்பு துணைத்திட்ட நிதியை முழுமையாக செலவிட , தலித் மக்களின்வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் சீரிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த கட்சி போராடும்.

தலித் மக்களுக்குள் பூர்வகுடி மற்றும் குடிபெயர்ந்தோர் என்ற சர்ச்சசை தலித் மக்களின் ஒற்றுமையை சிதைத்துவருகிறது. உலகமயம், தனியார் மயம், தாராள மயக்கொள்கை தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் , வாழ்வு தேடி புலம் பெயர்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மத்திய அரசுப்பணியில் உள்ளவர்கள் இடம் பெயர்வதும் தொடர்கிறது. மேலும் பூர்வகுடிகளாக இருந்தும் கல்வியறிவு இன்மையாலும், சொந்த வீடோ, நிலமோ பெற்றிருக்காத நிலையில் இம்மக்களும் குடிபெயர்ந்தவர்களாகவே கருதப்படுகிறார்கள். ஆகவே, தலித் மக்களில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைத்திட , தலித் மக்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாகப் போராடும்.

தலித் மக்களில் மேலும் ஒடுக்கப்பட்ட பிர்வாக உள்ள அருந்ததியர் மக்களுக்கு உரிய உள்ஒதுக்கீடு கிடைக்கவும் , பிற்பட்ட பழங்குடி இன மக்களுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு என்பதை பழங்குடி இன மக்களுக்குரிய இடஒதுக்கீடாக பெற்றிடவும் கட்சி போராடும்.

தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் தங்கும் விடுதிகளை நவீனப்படுத்தி சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும், சத்தமான கடிநீர், சத்தான உணவு வழங்க தேவையான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்திட கட்சி பாடுபடும்.

தலித் மக்களுக்கு 5.90 லட்சம் செலவில் கட்டி வழங்கப்படும் தொகுப்பு வீடுகள் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை களைந்து, தகுதியான மக்கள் அனைவருக்கும் கிடைத்திட, கண்காணிப்பு குழு அமைத்திட கட்சி போராடும்.

உள்ளாட்சிக்கு கூடுதல் அதிகாரம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கிட மக்கள் பங்கேற்போடு சமூக நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திட, மாநில அரசின் மொத்த வருவாயில் 30% நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கிட கட்சி உறுதியாகப் போராடும். தனியார் பங்கேற்புடன் நடைபெறும் துப்புரவு பணியை முறைப்படுத்தவும், ஒப்பந்த துப்புறவு தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கவும் கட்சி பாடுபடும்.


தமிழ் ஆட்சிமொழி


நீதிமன்றம் உள்பட அனைத்து துறைகளிலும் தமிழ் ஆட்சி என்பதை உறுதிப்படுத்த, தமிழ்மொழி வளர்ச்சிக்கு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த கட்சி போராடும். மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் பிராந்திய மொழியை ஆட்சி மொழியாக இருப்பதை உறுதிப்படுத்தவும் கட்சி போராடும்.

தடையில்லா மின்சாரம் அனைத்துப் பகுதியினருக்கும் கிடைத்திடும் வகையில் மத்திய மின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெற்றும் , மரபுசார் உள்ளிட்ட புதிய மின் திட்டங்கள் கொண்டுவந்தும் மின் தேவையை ஈடுசெய்ய கட்சி போராடும்.
மாற்றுத்திறனாளிகள் நலன்

மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3% இடஒதுக்கீடு வழங்கிட உறுதியாக கட்சி போராடும். மாற்றுத் திறனாளிகளுக்கான பென்­ன் உதவியை அதிகரிக்க, நின்று போன மாதம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, போர்வை .... உள்ளிட்ட நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்திட, சுயத்தொழில் துவங்க மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்க கட்சி பாடுபடும்.


சிறப்பு மாநில அந்தஸ்து


புதுச்சேரி சட்டமன்றம் நிதி நிர்வாகம் , சட்டம் இயற்றுதல், ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றில் சுயேட்சையாக முடிவெடுக்கும் அதிகாரமற்ற அரசாக உள்ளது. அரசு உயர் பதவிகளில் மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க மாநில பணித்தேர்வாணையம் மற்றும் தனி கல்வி வாரியம் அமைக்க இயலவில்லை. மேலும் புதுச்சேரி விடுதலையடைந்து இந்திய ஒன்றியத் தோடு இணைக்கப்படுகிற போது இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் நடப்பில் இருந்ததால் புதுச்சேரி அடிப்படை கட்டமைப்பில் மிகவும் பின்தங்கியுள்ளது. ஆகவே, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து பெற்றிட கட்சி உறுதியாகப் போராடும்.


காரைக்கால் பிராந்தியத்திற்கு சிறப்புத்திட்டங்கள்


புதுச்சேரி மாநில ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் நான்கு பிராந்தியங்களிலும் உள்ள வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கண்டறிந்து திட்டங்களை செயல்படுத்துவதிலும், சமஅளவு முக்கியத்துவம் அளிப்பதிலும் தோல்வியடைந்துவிட்டார்கள். இதனால் ஒன்றுபட்ட மாநிலத்தில் பிராந்தியங்களுக்கிடையில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஏற்ற இறக்கம் உருவாகி பிராந்திய கோ­ங்களும் எழுகிறது. இந்நிலையை மாற்றிட பிராந்தியங்களுக்கிடையில் சமூக கலாச்சார பண்பாட்டுத்தளத்தில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த - பொருளாதார வளர்ச்சி திட்டங்களை சம அளவு முக்கியத்துவம் செயல்படுத்திட கட்சி போராடும். மிகவும் பின்தங்கிய காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பு வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த கட்சி போராடும்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத காங்கிரஸ் தி.மு.க கூட்டணியை தோற்கடித்து , ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றி, மாற்று அரசை கொண்டுவருவதன் மூலமே புதுச்சேரி மக்களின் நலன்களையும் , உரிமைகளையும் பாதுகாக்க முடியும்.


புதுச்சேரி சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளின் பலம் அதிகரிப்பது என்பது மக்கள் பிரச்சனைகளை வலுவாக உறுதியாக வாதிடவும், மக்கள் நலனை பாதுகாக்கவும், சட்டப்பேரவை ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும் இயலும். கடந்த 14 வது நடாளுமன்ற காலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகாலத்தில் இடதுசாரிகளின் பங்களிப்பது இந்திய சூழலில் மாறுபட்ட ஒன்றாக , மக்கள் நலன்சார்ந்ததாக இருந்ததை மக்கள் அறிவார்கள். அந்த தன்மையில் புதுச்சேரி அரசியலில் இடதுசாரிகளின் பங்களிப்போடு கூடிய சட்டப்பேரவை ஆரோக்கியமான மக்கள் நலன்சார்ந்த அரசியலை வெளிப்படையான ஆட்சியை உறுதிப்படுத்த உதவும்.

ஆகவே, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி இலாசுப்பேட்டை , பாகூர், திருபுவனை ஆகிய தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு அரிவால் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.இதரத் தொகுதிகளில் காங்கிரஸ் - திமுக கூட்டணியை வீழ்த்திட அ.இ.அ.தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு அவரவர்களின் சின்னத்தில் வாக்களித்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேசக்குழு மாநில மக்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறது.

இவண்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்)
புதுச்சேரி பிரதேசக்குழு

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com