புதுச்சேரி ஏப் 22
அதிகாரத்தை தவராக பயன்படுத்தியுள்ள புதுச்சேரி துனை நிலை ஆளுநர் இக்பால்சிங் பதவி விலககோரி மார்ச்சிஸ்ட் கட்சி சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம்.
வரிஏய்பில் கைது செய்யப்பட்டுள்ள ஹசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் வழங்க பரிந்துரைத்த குற்றத்தில் சிக்கியுள்ள புதுச்சேரி துனைநிலை ஆளுநர் இக்பால் சிங் கை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவெண்டும்.புதுச்சேரி அமைச்சரவைக்கு தெரியாமல் தன்னிச்சையாக தனது மகன்கள் இடம் பெற்றுள்ள சவுத் எஜிகேஷ்னல் டிரஸ்டிக்கு, காரைக்காலில் மருத்துவகல்லுhரி துவங்க தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ள ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். தவரும் பட்சத்தில் முதல்வர் வைத்தியலிங்கம் பதவி விலக வேண்டும்.மோசடி குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளோர் மீது புதுச்சேரி அரசு வழக்கு பதிவு செய்ய வெண்டும். என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கவர்நர் மாளிகை அருகில் வெள்ளிக்கிழமை (ஏப்-22)கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்க்கு செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றுகையில் ,முன்னால் முதல்வர் ரங்கசாமி ஆட்சியின் போது ஜந்து அமைச்சர்களும் எங்களை கேட்காமல் கோப்புகளில் கையெழுத்து போடுகிறார் என்று ரங்கசாமி மீது முதல்வர் வைத்தியலிங்கம் உட்பட குற்றம் சுமத்தினார்கள்.தற்போது அமைச்சரவைக்கே தெரியாமல் ஆளுநர் இக்பால் சிங் மருத்துவ கல்லுhரிக்கு அனுமதி வழங்கியிருப்பது ஏன் முதல்வர் மவுணம் காப்பது மாநில மக்களிடம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
எனவே ஆளநரை மத்திய அரசு திரும்ப பெறவில்லை என்றால் அவர் பங்கேற்க்கும் நிகழ்ச்சிகளில் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை மார்க்சி°ட் கட்சி நடத்தும்.மேலும் அனைத்து கட்சிகளையும் இணைத்து ஆளநரை திரும்ப பெரும் வரை போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு பேசினார்கள்.
முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு,பிரதேசக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர்.போராட்டத்தில் பங்கேற்றனர் போராட்டத்தையொட்டி கவர்னர் மாளிகை முன்பு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
படம் உள்ளது