Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, April 12, 2011

புதுச்சேரியில் மக்களை கவர்ந்து வரும்கிருஷ்ணகிரி தப்பாட்ட கலைக்குழுவினரின் நீங்களே சொல்லுங்கள் என்ற நாடகம்.

0 comments



புதுச்சேரி ஏப்ரல் 7
புதுச்சேரியில் மக்களை கவர்ந்து வரும்கிருஷ்ணகிரி தப்பாட்ட கலைக்குழுவினரின் நீங்களே சொல்லுங்கள் என்ற நாடகம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இலாஸ்பேட்டை தொகுதி போட்டியிடும் வேட்பாளர் பாலமோகனனுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி தப்பாட்ட கலைக்குழுவினர் வீதி வீதியாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.முதலில் தப்பட்டத்தை அடித்து மக்களை கவர்ந்து கூட்டம் கூடிய உடன் பின்னர் நீங்களே சொல்லுங்கள் என்ற வீதி நாடகம் அரங்கேற்ற படுகிறது.இந்த நாடகத்தில் திருமணம் செயவதற்க்கு மாப்பிளை வீட்டார் பெண் பார்க்க செல்கின்றனர்.பெண் வீட்டார் மாப்பிளை வீட்டாரை பார்த்து எவ்வளவு வரதட்சனையாக தங்கம் எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்க வரதட்சனையா அதெல்லாம் தேவையில்லை ஒரு கிலோ வெங்காயம்,ஒரு கிலோ பூண்டு ,ஒரு கிலோ சமையல் எண்னை உள்ளிட்ட பொருட்களை மட்டும் கொடுத்தாபோதும் எனக்கூற அதற்கு பெண் வீட்டார் சம்மத்துடன் திருமணமும் நடைபெருகிறது.தாலி கட்டும் நேரத்தின் போது கேட்ட பொருட்களில் 100 கிராம் எடை குறைகிறது.உடனே மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நடத்த மருக்கின்றனர்.அப்போது பெண் வீட்டார் நீங்கள் கேட்ட பொருட்களை வரதட்சனையாக கொடுத்துள்ளேன் எனக்கூற பின்னர் குறைந்த பருப்பை திருப்பி தந்தவுடன் கல்யானத்திர்க்கு மாப்பிளை வீட்டார் சம்மதிக்கின்றனர்.
விலை உயர்ந்த தங்கத்தைவிட மளிகை காய்கறிகள் விலை உயர்ந்திருப்பதை எடுத்து காட்டும் விதமாக நடகத்தின் கருத்து அமைந்தது.இந்நாடகத்தை பார்த்த மக்கள் நம்மை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை பற்றி தெரிந்து கொண்டனர். நீங்களே சொல்லுங்கள் என்ற நாடகத்தின் தலைப்புக்கினங்க மார்ச்சி°ட் கட்சிக்கு தான் எங்கள் ஓட்டு என்று வாக்காளர்கள் கைதட்டலுடன் உறக்க தெரிவித்தனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com