புதுச்சேரி ஏப் 14
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுச்சேரியில் மாலை அணிவிக்கப்பட்டது.
புதுச்சேரி சட்டமன்றம் எதிரே அமைந்துள்ள அம்பேத்கரின் முழ திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுவை தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள் மற்றும் முன்னணியின் நிர்வாகிகள்கலிவரதன்,கொளஞ்சியப்பன்,அரிகிருஷ்ணன்,லெனின்துரை,தமிழ்ச்செல்வன்,மணிபாலன்,வழக்கறிஞர் °டாலின்,ரமேஷ்,அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன்,ஆனந்தராசன்,புகழேந்தி,சிபிஎம் செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன், முருகன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,முருகைன்,ராம்ஜி,பிரபுராஜ் மற்றும் நடராஜன்,குணசேகரன்,சிவக்குமார்,சந்துரு அருந்ததியினர் சங்கத் தலைவர் தவமணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக வ.உ.சி அரசு பள்ளி எதிரில் இருந்து ஊர்வளமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.