புதுச்சேரி மார்ச் 29
புதுச்சேரி இலாஸ்பேட் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் வேட்பாளர் பாலமோகனனுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.லாஸ்பேட் தொகுதியில் போட்டியிடும் அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் சி.எச்.பாலமோகனன் செவ்வாயன்று உழவர் சந்தையில் இருந்து வாக்கு சேகரிப்பு பணியை துவங்கினார்.
40 ஆண்டுகாளமாக அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பாலமோகனன் பொது மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடி வந்துள்ளார்.லா°பேட் தொகுதியில் கனிசமான அரசு ஊழியர்கள், நெசவாளர்கள்,முறைசாரா தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது.இம்மக்களிடம் எளிமையாக பழக கூடியவராக திகழுந்து வருபவர் பாலமோகனன்.
வாக்குகள் சேகரிப்பு
நெருப்புக்குழி ,நேருவில் நகர் ,காமன் கோவில் வீதி,சுப்பரமணியர் கோவில் வீதி ,லாஸ்பேட் மேயின் ரோடு ஆகிய பகுதிகளின் மக்களை சந்தித்து பாலமோகனன் வாக்கு சேகரித்தார்.அப்போது பாலமோகனனுக்கு மக்களிடையே நல்ல வரவேற்ப்பு கானப்பட்டது.மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,உழவர்கரை- நகர கமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,சீனுவாசன், பிரதேசக்குழு உறுப்பினர்கள்,மாணவர் ,வாலிபர் சங்கங்களின் நிர்வாகிகளோடு திரளாக சென்று பாலமோகனன் வாக்குகளை சேகரித்தார்.