புதுச்சேரி ஏப்ரல் 9
பெண்களை இழிவாக பேசிய மத்திய இணைஅமைச்சர் நாராயணசாமியை அமைச்சரவையில் இருந்து திரும்பபெற வேண்டும் என்று மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள் மாநிலக்குழு உறுப்பினர் முருகன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் ,
இலா°பேட்டை தொகுதியில் பேசிய மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசும் போது செல்போன்,குக்கர்,பிரிஜ் உள்ளிட்ட அணைத்து பொருட்களும் கொடுக்கிறோம் பிள்ளையை மட்டும் பெற்று கொடுக்கவில்லை என்று பெண்களை பார்த்து இழிவாக பேசியுள்ளார்.மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் போது மாநிலத்தில் மாற்று ஆட்சி அமைந்தால் நிதி கிடைக்காது என்று பேசியுள்ளார்.அமைச்சர் நாராயணசாமியின் பேச்சு இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது பெண்களையை இழிவு படுத்தும் செயல் எனவே முன்னாள் அமைச்சர் அங்காளனை திரும்பபெற்றதை போல் நாராயணசாமியையும் திரும்ப பெற வெண்டும்.அதே போல் ரு.70 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட அசன் அலிக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் விசா எடுத்து கொடுத்துள்ளது தொடர்பாக அவரை விசாரிக்க புதுச்சேரி அரசுக்கு மத்திய அமலாக்க பிரிவினர் கடிதம் அனுப்பிள்ளனர்.எனவே அது உண்மை என்றால் துனைநிலை ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சிறுவர்களை தேர்தல் பணியில் அமர்த்தி பணபட்டு வாட செய்து வருகின்றனர். தேர்தல் விதிமுறையில் ஈடுபட்டு வருபவர்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனவே மத்திய தேர்தல் ஆனையத்துக்கும் மாநில ஆனையத்துக்கும் புகார் கடிதங்களை கட்சியின் சார்பில் அனுப்பி வருகிறோம் .இவ்வாறு கூறினார்கள்.
முன்னதாக கட்சியின் புதுச்சேரி வெப்சைட் இணையளத்தை www.cpim-puducherry.org/தா.முருகன் புதியதாக இயக்கி வைத்தார்.உடன் செயற்குழு உறுப்பினர்கள் கே.முருகன்,ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.