புதுச்சேரி ஏப் 23
புதுச்சேரி ஆளுநர் இக்பால்சிங் கை உடனே திரும்பபெறக்கோரி அனைத்துக்கட்சிகள் சார்பில் ஏப்ரல் 27 ல் பந்த் போராட்டம்.
முதலியார் பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை (ஏப்-23) நடைபெற்றது.இக்கூட்டத்தில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்,அவைத்தலைவர் பாண்டுரங்கன்,சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,சிபிஜ மாநில செயலாளர் நாரா.கலைநாதன்,தேசியக்குழு உறுப்பினர் விசுவநாதன்,ராமமூர்த்தி,N R.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன்,ஆர்.எஸ்.பி மாநில நிர்வாகி சந்திரசேகர்,கெ.பிஎஸ்பி தலைவர் தங்ககலைமாறன்,தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் லோகுஅய்யப்பன்,கிராமபஞ்சாய்த்து கூட்டமைப்பு தலைவர் ஜெகநாதன்,உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.பின்னர் கூட்டாக தலைவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிகையில்,
கருப்பு பண விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஹசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் வழங்க ஆவணம் செய்தகுற்றத்திலும் ,தனது மகன்கள் இடம் பெற்றுள்ள சவுத் எஜிகேஷ்னல் டிரஸ்டிக்கு காரைக்காலில் மருத்துவ கல்லுhரி துவங்க தடையில்லா சான்றிதழை புதுச்சேரி அமைச்சரவைக்கே தெரியாமல் வழங்கியுள்ளது.என பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் கை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என வலியுருத்தி ஏப்ரல்-27 ல் புதுச்சேரி-காரைக்கால்,மாஹே,யாணம் ஆகிய நான்கு பிரதேசங்களிலும் முழு கடைஅடைப்பு போராட்டம் நடைபெறும்.இப்போரட்டத்திர்க்கு பிறகும் ஆளுநர் திரும்ப பெற வில்லை என்றால் குடியரசு தலைவரை சந்தித்து இக்கட்சிகளின் சார்பில் வலியுருத்தப்படும்.
மேலும் முழு கடைஅடைப்பு போராட்டத்தை விளக்கி ஏப்ரல்-25,26 ல் புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம் செய்யப்படும்.இப்போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க அனைத்து கட்சி தலைவர்கள் கேட்டுகொண்டனர்.இவ்வாறு கூறினார்கள்