புதுச்சேரி ஏப்ரல் 8
சாரயக்கடை-பிராந்திகடை அதிகம் உள்ள புதுச்சேரியில் ஏன் காங்கிரஸ் ஆட்சியில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வில்லை என்று உ.வாசுகி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி இலாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பாலமோகனனுக்கு வாக்குகள் சேகரிக்கும் பிரச்சாரக்கூட்டம் ஜீவானந்தபுரம்,நெசவாளர் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பங்கேற்று பேசுகையில்,மக்கள் வரிபணத்தை வாரி சாப்பிட்டு ஏப்பம்விட்டு தற்போது மக்களிடம் வாக்கு சேகரிக்க காங்கிரஸ்-திமுக கட்சிகளின் வேட்பாளர்கள் வளம் வருகின்றனர்.இவர்களின் கடந்த ஜந்து ஆண்டுகாள ஆட்சியில் விலைவாசி உயர்வு வரலாறு காணாத வகையில் விண்னை முட்டியுள்ளது.இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் சமூக விரோத குற்றங்களை திட்டமிட்டு புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அதிகரிக்க வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டிய உ.வாசுகி
திருமங்களம் தேர்தல் பார்மளாவின் படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பாதித்த பணத்தை வைத்து தமிழகம்-புதுச்சேரி வாக்காளர்களை விலைபேசிடலாம் என்ற திமுக-காங்கிரஸ் எண்ணங்கள் முறியடிக்கப்படும்.நெசவாளர்கள்,முறைச்சார தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைப்பாளி மக்களுக்காக தொடர்ந்து போராடிவரும் மார்ச்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பாலமோகனன் தேர்ந்தெடுக்கப்பட்டாள் சட்டமன்றத்தின் கண்களாக செயல்படுவார்.இவ்வாறு பேசினார்.
முன்னதாக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,பிரதேச செயலாளர் பெருமாள்,வேட்பாளர் பாலமோகனன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.