
புதுச்சேரி,மார்ச்-15
ஆறு மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவுகளை நீதி மன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு உத்தரவு.
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் காலம் 2011 ஜூலை 7 தேதியுடன் முடிவடைந்ததை யொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.உயர் நீதிமன்றம் 2012 ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் (6 மாதத்திற்குள்) தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.இந்நிலையில் புதுச்சேரி அரசு மாநில தேர்தல் ஆணையரை நியமிக்காமலும் தேர்தலையும் நடத்தாமல் காலம் கடத்தி வந்தது.இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் படி காலகொடு முடியும் ஒரு வாரகாலத்திற்கு முன்பு பிப்ரவரி மாதம் புதுச்சேரி அரசு சார்பில் கால அவகாசம் வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் உடணடியாக மார்ச் 8 ஆம்தேதிக்குள் மாநில தேர்தல் ஆணையரை நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. மீண்டும மார்ச் 8ஆம் தேதிக்கு விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் ஆஜாராண புதுசசேரி அரசு வழக்கறிஞர், ஆளுநர் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளதால் தேர்தல் ஆணையரை நியமிக்க முடியவில்லை என்று கூறினார்.உடனே அடுத்த மார்ச்-15 க்கு விசாரணைக்கு வரும் போது ஆணையரை நியமித்ததிற்கான அரசின் ஆணையை இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டது. இந்நிலையில் வியாழன்று (மார்ச்-15) இவ்வழக்கு விசாரணையின் போது ஆஜாராண அரசு வழக்கறிஞர் மாநில தேர்தல் ஆணையர் உடிப்டரே நியமிக்கபட்டுள்ளார் என்று கூறியதுடன் அதற்கான அத்தாட்சியை தலைமை நீதிபதி இக்பால் முன்னிலையில் தாக்கல் செய்தும், தேர்தல் நடத்துவதற்கு கால அவகாசம் கேட்டார்.அதன் படி சிபிஎம் செயலாளர் வெ.பெருமாள் சார்பில் ஆஜாராண வழக்கறிஞர் அ.ஸ்டாலின் மூன்று மாதத்திற்குள் புதுச்சேரி அரசு தேர்தலை நடத்த வேண்டும் என்று வாதிட்டார்.இருதரப்பு வாதத்தையும் விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் புதுச்சேரியில் 6 மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.தேர்தலை நடத்தி விட்டு அதற்கான முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்பிக்கவேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.