
புதுச்சேரி,மார்ச்-6
மருத்துவ கல்லுhரியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
முhர்க்சி°ட் கட்சியின் பிரதேச செயற்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையில் நiபெற்றது.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுhரியில் வேலைவாய்ப்பகம் மூலம் பணிக்கு அமர்த்தப்பட்ட 137 ஊழியர்களை அரசு நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது கண்டனத்திற்குரியதாகும்.பணிநீக்கம் செய்யப்பட்ட மருத்துவக்கல்லுhரியின் ஊழியர்களையும் மீண்டும் பணியில் அமர்த்திட வேண்டும்.அதேப்போல் கடந்த காங்கிர° ஆட்சி காலத்தில் 4ஆயிரம் பேர்களை அரசுத்துறை,தன்னாட்சி,கூட்டுறவு நிறுவனங்களில் முறைகேடான முறையில் பணியில் திணிக்கப்பட்டார்கள்.தற்போது உள்ள என்.ஆர் காங்கிர° ஆட்சியில் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி இந்த 4 ஆயிரம் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.ஆனால் பான்லே,அரசு பல் மருத்துவக்கல்லுhரி,பிப்டிக்,அரசு வேளான் பண்ணை என பல அரசு சார்பு நிறுவணங்களில் கொள்ளைப்புற வழியாக மீண்டும் பணித்திணிப்பை தற்போதைய என்.ஆர் அரசு செய்து வருவது கவலை அளிப்பதாகும்.ஏற்கனவே பணி செய்து வரும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கபடவில்லை.எனவே தான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அதே நிலைமை தான் என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்கிறது.
புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பகம் மூலம் பணிக்கு அமர்த்தவும்,சட்டக்கூலியை வழங்கவும்,தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஓதுக்கீடு வழங்கவும் முன் வரவேண்டும் என மார்க்சி°ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.