Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, March 12, 2012

ராஜீவ்காந்தி நகர் குடியிருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

0 comments

புதுச்சேரி,மார்ச்-5
ராஜீவ்காந்தி நகர் குடியிருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி புதுச்சேரி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜீவ்காந்தி நகரில் மூன்று ஏக்கர் நிலத்தில் 70 மணைகள் பிரிக்கப்பட்டு பத்திரங்களோடு விற்பனை செய்யப்பட்டது.மனைகளை வாங்கிய குடும்பங்கள் கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்து அவ்விடத்தில் கல்வீடுகளை கட்டி குடியிருந்து வருகின்றனர்.இந்நிலையில் கருவடிக்குப்பத்தில் உள்ள கருமுத்துமாரியம்மன் அரங்காவலர் குழுவினர் ராஜீவ்காந்திநகரில் குடியிருப்பவர்களிடம் இவ்விடம் கோவிலுக்கு சொந்தமானது என்று கூறி குடியிருப்பவர்களிடம் தலா ரூ.6லட்சம் கேட்டுள்ளனர்.இதற்கு அப்பகுயில் குடியிருக்கும் மக்கள் சம்மதிக்காத நிலையில் கடந்த மார்ச்-5 ஆம்தேதி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் ராஜீவ்காந்தி நகரில் உள்ள காலி மனைகளில் உள்ள காம்பவுன்டு சுவர்களை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.மேலும் குடியிருக்கும் மக்களிடம் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று மிரட்டி சென்றுள்ளனர்.

ஆட்சியர் அலுவலம் முற்றுகை
இந்நிலையில் பாதிக்கபட்ட ராஜீவ்காந்தி நகர் குடியிருக்கும் மக்கள் தங்களது குடும்பத்தோடு திங்களன்று (மார்ச்-5) சாரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மார்க்சி°ட் கட்சியின் தலைமையில் முற்றுகையிட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி தலைவர்கள் மற்றும் குடியிருக்கும் மக்களிடம் மாவட்ட துணை ஆட்சியர் வின்சென்ட்ராயர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.இச்சந்திப்பில் மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,உழவர்கரை நகர செயலாளர் எ°.லெனின்துரை,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் மற்றும் எதிர்கட்சி தலைவர் வைத்தியலிங்கம்,சிபிஜ தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.வீட்டு காம்பவுண்டு சுவர்களை இடித்த சமூக விரோதிகள் மற்றும் மோசடி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கருமுத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிய படுத்த வேண்டும் என மாவட்ட துணை ஆட்சியரிடம் தலைவர்கள் வலியுறுத்தினர்.இன்னும் ஒரு வாரத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை ஆட்சியர் உறுதி அளித்தார்.அதனை தொடர்ந்து இப்போராட்டம் கைவிடப்பட்டது.மேலும் குடியிருப்பதற்கான ஆவனங்களும் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com