Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, March 2, 2012

பொது வேலைநிறுத்தத்தை வெற்றி பெற ஆய்த்த பேரணி அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் புதுச்சேரியில் நடையபெற்றது

0 comments

புதுச்சேரி,பிப்-23
பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 28 ல் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தை வெற்றி பெற ஆய்த்த பேரணி அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் புதுச்சேரியில் நடையபெற்றது.
புதிய பென்சன் திட்ட மசோதாவை கைவிட வேண்டும்.அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் துவங்கிய பேரணிக்கு அரசு ஊழியர் சம்மேளன தலைவர் ஆனந்தராசன் தலைமை தாங்கினார்.சம்மேளன கவுரதலைவர் பாலமோகனன்,பொதுச்செயலாளர் புகழேந்தி,ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள்,சம்மேளன நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக அண்ணாசாலை,நேருவீதியை கடந்து தலைமை தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com