Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, March 12, 2012

கசாப்புகாரன் தோப்பில் குடியிருந்த மக்களுக்கே மனைப்பட்டா வழங்க வேண்டும்

0 comments

புதுச்சேரி,மார்ச்-6
கசாப்புகாரன் தோப்பில் குடியிருந்த மக்களுக்கே மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி முத்தியாள்பேட்டை அடுத்து சோலைநகரில் உள்ள கசாப்புகாரன் தோப்பில் கடந்த 10வருடங்களாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை வீடுகளை கட்டி வாழ்ந்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு மர்மான முறையில் இந்த குடிசைள் தீயில் எரிந்துள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மனைப்பட்டா வாங்கி தருகிறேன் என்று உறுதியளித்துள்ளார்.ஆனால் இதுநாள்வரை மணைப்பட்டா வாங்கி கொடுக்கவில்லை.இந்நிலையில் இவ்விடத்தை சொந்தம் கொண்டாடும் தனி நபர் இவ்விடத்தில் குடியிருக்கும் மக்களை காலிசெய்ய அடியாட்களை வைத்து மிரட்டுவதாக தெரிகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ்,முத்தியாள்பேட்டை கிளை செயலாளர் சரவணன் ஆகியோர் மாவட்ட உதவி ஆட்சியர் வின்சென்ட்ராயரை சந்தித்து மனு அளித்தனர்.மேலும் கசாப்புகாரன் தோப்பில் குடியிருக்கும் மக்களுக்கே மனைப்பட்டா வழங்க வேண்டும்.அது வரை அவ்விடத்தை யாரும் விற்கவே,வாங்கவே அனுமதியளிக்ககூடாது என்று வலியுறுத்தினர்.மனுவை பெற்று கொண்ட உதவி ஆட்சியர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com