புதுச்சேரி,பிப்-22
மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் மற்றம் பொறியாளர்கள் சார்பில் புதுச்சேரி சட்டமன்றம் முன்பு பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரசின் கீழ் இயங்கும் மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்றினால் மத்திய அரசின் நேரடி பார்வையில் இருந்து விடுபட்டு மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் மின்சாரம்,மானியத்துடன் கிடைப்பது கேள்விகுறியாகும்.மேலும் நீண்ட மணிநேரம் மின்தடையும் ஏற்படும்.மேலும் இலவச மின்சாரம் தடைபட்டு கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவே புதுச்சேரி அரசின் மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்றக்கூடாது என வலியுறுத்தி ஊழியர்கள்,பொறியாளர்கள் சார்பில்; இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மின்துறை எதிரில் இருந்து துவங்கிய இப்போராட்டத்திற்கு மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.பொதுசெயலாளர் இராமசாமி,பொருளாளர் தனிகாசலம் சிஐடியூ நிர்வாகிகள் நாராயணன்,ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரளான ஊழியர்கள்; பொறியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.அண்ணாசாலை,நேருவீதியை கடந்து சட்டமன்றம் முன்பு கண்டன போராட்டம் நடைபெற்றது.பின்னர் மின்சாரதுறை அமைச்சர் தியாகராஜனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.