Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, March 2, 2012

புதுச்சேரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட தனியார்பள்ளி ஆசிரியர்கள் கைது

0 comments

புதுச்சேரி,பிப்-29
புதுச்சேரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட தனியார்பள்ளி ஆசிரியர்கள் கைது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பல ஆண்டுகளாக சொற்ப ஊதியம் பெற்று பணி செய்து வரும் தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கு உருவாக்கப்பட்ட பதவிகளுக்கான அரசு ஆணை என்.86 யை உடனே அமல்படுத்த வேண்டும்.கல்வித்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.அரசு ஆசிரியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளையும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு தனியார் பள்ளி ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் வின்சென்ட் ராஜ் தலைமை தாங்கினார்.பொதுசெயலாளர் கிரிஸ்டோபர்,அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன்,தலைவர் ஆனந்தராஜ்,ஆசிரியர் சங்க கவுரவ தலைவர் சண்முகம்,தலைவர் வ°சலா,நிர்வாகி சுமதி உள்ளிட்டோர் கல்வித்துறையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 98 ஆசிரியர்களை போலிஸார் கைது செய்தனர்.



புதுச்சேரி,பிப்-29
காலாமானார்.
மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி அரியாங்குப்பம் கிளை செயலாளர் துரைமுருகனின் தந்தை என்.துரைக்கண்ணு ( வயது 65) காலாமானர்.சிறிது காலம் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் தங்கியபடி சிகிச்சை பெற்று வந்தார்.காக்கயாந்தோப்பு வீட்டில் வைக்கப்பட்டிருந்த துரைக்கண்ணு உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் உள்ளிட்ட பிரதேசக்குழு,கமிட்டி உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com