புதுச்சேரி,மார்ச்-15
மானைப்பட்டா வழங்ககோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி முத்தியாள்பேட்டை அடுத்து சோலைநகரில் உள்ள கசாப்புகாரன்தோப்பில் கடந்த 10ஆண்டுகளுக்கு மேல் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர்.இந்நிலையில் இம்மக்களுக்கு மாற்று இடம் கொடுக்கிறோம் என்று கூறி சட்டமன்ற உறுப்பினர் நந்தா சரவணன் முன்னிலையில் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு முன்னால் சபாநாயகர் பழனிவேல்ராஜாவின் மகன் சவுரிராஜன் என்பவர் காலிசெய்துள்ளார்.இதற்கு குடியிருந்த ஒருசில குடும்பங்களை தவிர மற்றவர்கள் காலிசெய்ய மருத்துள்ளனர்.இந்நிலையில் ரவுடிகளை வைத்து குடியிருந்த வீடுகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.மேலும் குடியிருந்த மக்களுக்கு இதுநாள்வரை மாற்று இடமும் வழங்கபடாதததை கண்டித்தும் குடியிருந்த மக்களுக்கே உடனடியாக மணைப்பட்டா வழங்ககோரி இப்போராட்டம் நடைபெற்றது.
சாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் முத்தியாள்பேட்டை கிளை செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் உண்ணாவிரத்தை துவக்கிவைத்து பேசினார்.செயற்குழு உறுபபினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,சுமதி,ராமச்சந்திரன், நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் ஆகியோர் உரையாற்றினார்கள்.இறுதியாக மாலையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து கட்சியின் செயற்குழு உறுப்பினர் கே.முருகன் பேசினார்.ஒருநாள் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களோடு வாலிபர் சங்க நிர்வாகிகள் சந்துரு,பா°கர்,விஜிய்,அழகப்பன்,அன்துhவன் ஆகியோரும் பங்கேற்றனர்.